முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இக்கரைக்கு அக்கரை பச்சை.

 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾வயலில் அனைத்து 🐂🐃🐃🐃🐂🐂🐄🐄🐂🐂🐮🐮🐄🐄மாடுகளும் 🌾🌾🌾🌾🌾🌾🌾புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒரு 🐄மாடு மட்டும் தன் தலையைத் தூக்கிப் பார்த்து சிறிது தூரத்திலுள்ள அந்த வயலில் தான், தான் இருக்கும் வயலில் உள்ள புல்லை விட உயரமாகவும் அதிகமாகவும் உள்ளது என்று நினைத்து கண்ணுக்கு எட்டிய தூரத்திலுள்ள வயலை சென்றடைந்தது. மாடு புல் மேய்ந்தபின் " முதலில் நாம் எந்த வயலில் இருந்து இந்த வயலுக்கு வந்தோமோ அந்த வயலைப் போல்தான் புற்கள் இங்கும் உள்ளது ,மேலும் இங்கிருந்து பார்ப்பதற்கு நாம் முன்பிருந்த வயலில் உள்ள புல் அதிகமாகவும் உயரமாகவும் உள்ளது" என்று எண்ணியது. நீதி - நாம் இருக்கும் இடத்தில் ஏதாவது கஷ்டம் வந்தால், மற்றவர்களுக்கு கஷ்டம் இல்லை தமக்கு மட்டுமே கஷ்டம் வருகிறது, "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பதை போன்று  இந்த இடத்தில்  இருப்பதால் தான் பிரச்சினை வேறு இடத்திற்கு சென்றால் பிரச்சினை இல்லை என்று எண்ணுவது தவறு. பிரச்சினைகள், கஷ்டங்கள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை எங்கு இருந்தாலும் பிரச்சனைகள் வருவது இயல்பே, பிரச்சனைக...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

 👦செல்வம் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், என்றும் அவன் சுறுசுறுப்பாக விளையாடுவான். அவன் இனிப்புகளையும் காரமான தின்பண்டங்களையும் அளவுக்கு மீறி உண்டு மகிழ்ந்து வந்தான். அதுமட்டுமின்றி அவன் உடலுக்கு சத்து சேர்க்கும், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை நிறுத்தினான். சில நாட்கள் கழித்து உடல் சோற்வுற்றான், முன்பு போல் அவனால் விளையாட முடியவில்லை. அவன் தன் தாயிடம் தன்னால் விளையாட இயலவில்லை என்று கூறினான். அதற்கு அவன் அம்மா "நீ சத்துமிகு பழங்கள், காய்கள் சாப்பிடாததாலும், தேவையான  அளவு தண்ணீர் பருகாமல் , உடற்பயிற்சி செய்யாமல் தின்பண்டங்களை உண்டது தான் உன்னால் விளையாட இயலவில்லை, இனியாவது காய்கள், பழங்கள் சாப்பிடு, தின்பண்டங்கள் சாப்பிடாதே" என்று கூறினார். செல்வம் தன் தவறை உணர்ந்து தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்தான், பழங்கள்,காய்கள் சாப்பிட்டு தேவையான நீர் பருகி, உடற்பயிற்சி செய்தான். உடல் ஆரோக்கியம் பெற்று சந்தோஷமாக விளையாடி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். நீதி- "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" , என்பது போல் 👦செல்வம், தன் தவறை உணர்ந்து சத்துமிகு க...

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காலம் பொன் போன்றது.

 👨ராமு, 👦சோமு இருவரின் வீடுகளும் அருகில் உள்ளது. இருவரும் நண்பர்கள், ஒரே பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ராமு தினமும் பள்ளியில் கற்ற கல்வியை வீட்டிலும் படிப்பவன், ஆனால் சோமு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும்  படிக்க விருப்பமில்லாமல் விளையாடுவான். பள்ளித் தேர்வு நாள் வருவதற்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராமு சோமுவிடம் "சோமு தேர்வு நாள் வருவதற்கு சில நாட்களே உள்ளது , அதனால் தேர்விற்கு படிக்கலாம்" என்று கூற, அதற்கு சோமு " நான் விளையாடச் செல்கிறேன் பின்பு படித்துக் கொள்கிறேன்" என்று படிப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தான். காலம் கழிந்தது தேர்வு நாள் மறுநாள் என்றானது. ராமு காலையிலிருந்து படிக்க ஆரம்பித்தான். சோமு தேர்வை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த ⚡இடி இடித்தது, 💨💨காற்று வீசியது, ⛈️மழை வரப் போகிறது என்பதை உணர்ந்து ராமு சோமுவிடம் " ராமு மழை வரப் போகிறது போலுள்ளது, மழை பெய்தால் 🌌🌒இரவில் 💡மின்சாரம் தடையாக வாய்ப்பு உள்ளது, எனவே விளையாடாமல் படிக்க வா சோமு" என்று கூற, சோமுவோ "⛈️மழை ஒன்றும் வராது "என்று கூற...

உழைப்பின்றி‌ ஊதியம் இல்லை.

 ஊரில் 👦ராஜா, 👨மகேஷ் என்ற இரு நண்பர்கள் ஒன்றினைந்து 🌾🌾🌾🌾விவசாயத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ராஜா விவசாயம் செய்யாமல் கடவுளின் அருளால் விவசாயம் செழிக்கும் என்று எண்ணி விவசாயம் செய்யாமல் அருகிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வேண்டி வந்தார்.ஆனால் மகேஷ் ஒருவரே விவசாய நிலத்தில் கடுமையாக உழைத்து பயிர்களை விளைவித்தார்.சிறிது நாட்கள் கழித்து செழிப்பாக விளைந்த பயிர்களை மகேஷ் அறுவடை செய்து சந்தையில் விற்று வந்தார். ராஜா "விவசாயத்தில் வந்த லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ளலாம்" என்று மகேஷிடம் கூறினார். அதற்கு மகேஷ் "லாபத்தை பகிர எனக்கு விருப்பமில்லை, நான் மட்டுமே உழைத்ததால் லாபம் எனக்கு மட்டும் தான் " என்றார். இதை கேட்ட ராஜா "நான் கடவுளை வழிபட்டதால் தான் விவசாயத்தில் லாபம் கிடைத்தது" என்றார். இருவரும் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து நடந்தவற்றை கூறி "யாரால் விவசாயத்தில் லாபம் கிடைத்தது? " என்று நீங்களே தீர்ப்பு வழங்குங்கள், என்றார்கள். பஞ்சாயத்து தலைவர் இருவரிடமும் இரு நெல் மூட்டைகளை கொடுத்து,"மறுநாள் காலையில் நெல்லை உரலில் இடித்து அரிசி ...

பேராசை பெருநஷ்டம்

 ஒரு ஊரில் 👧கவிதா , 👧சீதா என்ற இரு பெண்கள் நண்பர்களாக இருந்து வந்தார்கள். இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க, ஒருநாள் கவிதா, "நாம் ஏதாவது தொழில் செய்து , அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்" என்று கூறினாள், சீதாவும் " சரி நல்ல யோசனை சாலையோரத்தில், நாம் இட்லி கடை வைப்போம் , இருவரும் வேலைகளை பிரித்து செய்வோம், நான் இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருகிறேன், நீங்கள் இட்லி தயார் செய்து கொடுங்கள், நான் நம் கடைக்கு வரும் அனைவருக்கும் இட்லியை  எடுத்து தட்டில் வைத்து தருகிறேன்" என்றாள். கவிதா " சரி" என்று கூறினாள். மறுநாள் காலையில் இருவரும் கடையை ஆரம்பித்து சீதா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி வந்தாள், கவிதா இட்லி தயார் செய்தாள், சீதா கடைக்கு வருகை தருபவர்களுக்கு அன்புடன் உணவை பரிமிறினாள், தங்கள் வேலையை இருவரும் சரியாக செய்தார்கள், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையிலேயே இட்லி சாப்பிட்டார்கள், லாபமும் அதிகரித்தது, இருவரும் கிடைத்த பணத்தை பகிர்ந்து கொண்டு  சந்தோஷமாக வாழ இவ்வாறு நாட்கள் பல கழித்ததும், கவிதா...

சிந்தித்து செயல்படு.

 கிணற்றில் 🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸தவளைகள் தன் கூட்டத்துடன் வாழ்ந்து வந்தது. கூட்டத்தில் இருந்த ஒரு 🐸 தவளையை மற்ற தவளைகள் கேளிக்கை செய்தது. தன் நண்பர்கள் கேளிக்கை செய்ததை விளையாட்டாக கருதாமல்  தன் குடும்பத்தை தவிர மற்ற அனைத்து தவளைகளையும் பலி வாங்க வேண்டும் என்ற வஞ்சம் கொண்டு பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்றது. பாம்பிடம் அந்த தவளை 🐸 "நீங்கள் எங்கள் கிணத்திற்கு வருகை தந்து ‌நான் கூறும் தவளைகளை நீங்கள் உண்ணலாம்" என்றது. இதை கேட்டவுடன் 🐍 பாம்பு தன் பசியைப் போக்க இதுவே சிறந்த வழி என்று நினைத்து "சரி வருகிறேன்" என்றது. அதற்கு தவளை பாம்பிடம் "மிக்க நன்றி பாம்பே, ஆனால் ஒரு ஒப்பந்தம், நீங்கள் நான் கூறும் தவளையை மட்டும் தான் உண்ண வேண்டும் என்று கூறியது. பாம்பு " இந்த ஒப்பந்தத்திற்கு நான் சம்மதிக்கிறேன்" என்றது. தவளை பாம்பை கிணற்றில் உள்ள ஒரு துளையின் வழியாக கிணற்றிற்குள் அழைத்துச் சென்றது. பாம்பு தவளையின் பேச்சை கேட்காமல் அனைத்து தவளைகளையும் தினமும் ஒரு தவளை என்ற விகிதத்தில் அழைத்து வந்த தவளையின் குடும்பத்தையும் உண்டது. இறுதியில் அந்த ஒரு தவளை பாம்பிடம் ...

வாய்மையே வெல்லும்.

 ஒருநாள் 🐄 மாடு காட்டில் உணவு உண்ணும் போது 🐅 புலி மாட்டை பார்த்தவுடன், புலிக்கு மாட்டை வேட்டையாடி உண்ண வேண்டும் என்று எண்ணி மாட்டை நோக்கி பாய்ந்து வந்தது. உடனே அந்த மாடு "புலியே நில், எனக்கு ஒரு கன்று குட்டி 🐮 பிறந்து 3 நாட்கள் தான் ஆனது, அந்த குட்டிக்கு உணவு தேடி உண்ண தெரியாது, அதனால் நான் என் குட்டிக்கு பால் கொடுத்து விட்டு , குட்டியிடம் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று கூறிவிட்டு இதே இடத்திற்கு வருகிறேன், அப்போது நீங்கள் என்னை உண்ணலாம் இப்போது கருணை காட்டுங்கள் நான் சென்று வருகிறேன் " என்று புலியிடம் கூறியது. அதற்கு புலி மாட்டிடம் " நீங்கள் புத்திசாலித்தனமாக என்னை ஏமாற்றப் பார்கின்றாய் நான் ஏமாறமாட்டேன் நான் ஒன்றும் ஏமாளி அல்ல  " என்றது. அதற்கு மாடு "நான் என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவன் , நீங்கள் என்னை நம்பலாம், மேலும் நான் ஒன்றை கூறுகின்றேன் எனக்கு இறந்து விடுவோம் என்ற பயம் எனக்கில்லை, ஏனென்றால் என்றாவது ஒருநாள் இப்பூமியில் உள்ள அனைவரும் இறந்து தான் ஆக வேண்டும், நான் இறப்பதால் உங்கள் பசி தீரும் என்றால் நீங்கள் என்னை உண்ண மனப்பூர்வமாக சம்மதி...

தாய் சொல்லைத் தட்டாதே.

  ஒரு கிராமத்தில் 🐐அம்மா ஆடு, தன் இரண்டு குட்டி 🐐🐐 ஆடுகளுடன் வாழ்ந்து வந்தது. அம்மா ஆடு தன் குட்டிகளுடன் "நான் உணவு தேடிச் செல்கிறேன், பத்திரமாக இருங்கள், அருகிலுள்ள காட்டுக்குச் செல்லக்கூடாது, நான் வரும் வரை இந்த இடத்திலேயே இருங்கள்" என்று கூறிச் சென்றது.அதுசமயம் ஒரு குட்டி ஆடு உறங்கியது.மற்றொரு குட்டி ஆடு 🦋பட்டாம்பூச்சியைப் பார்த்தது. தன் தாய் ஆடு சொன்னதை மறந்து பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து சென்று காட்டின் நடுப்பகுதியை அடைந்தது. அம்மா ஆடு உணவு எடுத்து வீட்டுக்கு வந்தது. ஒரு குட்டி ஆடு மட்டும் இருப்பதை கண்டு வேதனையில் மற்றொரு குட்டி ஆட்டை தேடி காட்டை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது.,அந்த குட்டி ஆட்டை காட்டிலுள்ள 🐺🐺🐺🐺🐺🐺🐺 ஓநாய்கள் கூட்டம்  சுற்றிவளைத்தது. அதில் ஒரு ஓநாய் குட்டி ஆடு சாப்பிட சுவையாக இருக்கும், அது என் பிறந்த நாள் பரிசாக வந்துள்ளது என்றது. அப்போது தான்  ஆடு தன் அம்மா ஆடு சொன்னதை கேட்காததால் இங்கு வந்து ஆபத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்து வேதனையுற்றது. அம்மா ஆடும் குட்டி ஆட்டை கண்டுபிடித்து , அருகில் வந்து ஓநாய்களுடன் "ஓநாய்களே தங்கள் வீரத்தை...

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

 காட்டில் 🦁சிங்கம்,🦒🦒🦒🦒🦒🦒🦒 ஒட்டகச்சிவிங்கிகள்,🦌🦌🦌🦌மான்கள்,🐰🐇🐰 முயல்கள்,🐒🐒🐒🐒🐒குரங்குகள் போன்ற விலங்குகள் வாழ்ந்து வந்தது. சிங்கம் தினமும் ஒரு விலங்கை வேட்டையாடி உண்டு மகிழ்ந்தது. அதனால் காட்டில் உள்ள விலங்குகள் ஒவ்வொரு நாளும் இன்று நாம் சிங்கத்திற்கு இரையாகி விடுவோமோ இல்லையா என்று தவிப்புடன் வாழும் நாட்களை மகிழ்ந்து வாழாமல் இருந்தது.அப்போது ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை தவிர ஏனைய அனைத்து விலங்குகளுடன் ஆலோசித்து "தினமும் சிங்கத்திற்கு பலியாகி விடுவோம் என்று பயந்து வாழ்வதை காட்டிலும் , சிங்கத்திற்கு ஒவ்வொரு நாள் ஒருத்தர் என தாமே முன்வந்து இரையாகி விடுவோம் அப்போதுதான் வாழும் நாட்களை பயம் இல்லாமல் வாழ முடியும்" என்று முடிவெடுத்தது. சிங்கத்திடம் இந்த முடிவை ஒட்டகச்சிவிங்கி கூறியது, சிங்கமும் வயதான காரணத்தால் வேட்டையாடுவதற்கு சிரமப்படுவதால் இந்த முடிவை ஒப்புக் கொண்டது.தினமும் ஒரு விலங்கு சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்து சிங்கத்திற்கு இரையாகியது. அந்நிலையில் முயல் சிங்கத்திற்கு இரையாகும் நேரம் வந்தது. முயலோ தான் சிங்கத்திற்கு இரையாவதை விரும்பாமல்  சிங்கத்திற்கு பாடம்...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

 குளத்தில் கொக்கும், 🐠🐟🐡🐋🎏🎏🎣 மீன்களும், 🦀நண்டும் வாழ்ந்து வந்தது. கொக்கு எப்பொழுதும் மீன்களைப் பிடித்து உணவாக உண்பதையே வழக்கமாக வைத்திருந்தது. ஒருநாள் கொக்கு மீன்களைப் பிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது என்று மனதில் எண்ணி தந்திரமான ஒரு திட்டத்தை தீட்டியது. அந்த திட்டத்தை செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று  எண்ணி சோகமாக இருப்பது போல தன் முகபாவத்தை மாற்றி நடித்தது.கொக்கின் நடிப்பை அறியாத நண்டும், மீன்களும் "கொக்கே ஏன் சோகமாக உள்ளாய்?", என்று கேட்டது. அதற்கு கொக்கு "அருகிலுள்ள மனிதர்கள் இந்த குளத்தை மண்ணைக் கொண்டு மூடப்போவதாக கூறியதை நான் கேட்டேன்" என்று பொய் சொல்லியது. கொக்கு கூறியது போல் அருகில் வேறு எந்த குளமும் இல்லை.கொக்கு சொல்வதை உண்மை என நம்பி மீன்களும், நண்டும் வருந்தியது. உடனே கொக்கு "எனக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது, அதாவது அருகில் இக்குளத்தைப் போன்று ஒரு குளம் உள்ளதை நான் அறிவேன், நான் உங்களை காக்கும் பொருட்டு அருகிலுள்ள குளத்திற்கு உங்களை அழைத்துச் சென்று உதவுகிறேன்" என்றது. இதனை கேட்ட நண்டும், மீன்களும் கொக்கு உண்மையாகவே தங்களுக்கு உதவி செ...

தினை விதைத்தவன் தினை அறுப்பான்,ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.

 ஒரு நாள் 🐜கட்டெறும்பு மரத்தில் ஏறிக் கொண்டிருந்த போது பலமான காற்று வீசியது. காற்றையும் மழையையும் எதிர்கொள்ள முடியாமல் கட்டெறும்பு மரத்தடியில் உள்ள குளத்தில் விழுந்தது.கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.🐦குருவி ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு, இறக்கும் தருவாயில் இருக்கும் கட்டெறும்பைப் பார்த்தது.பார்த்த உடனே மரத்தின் கிளையில் இருக்கும் இலையை பறித்து கீழே உள்ள குளத்தில் கட்டெறும்பை நோக்கி வீசியது.அந்த இலை குளத்தில் தண்ணீரில் விழுந்தது.இலை தண்ணீரின் மேலே மிதப்பதை கண்ட கட்டெறும்பு தன் முயற்சியால் முயன்று இலையின் மேலே ஏறி அமர்ந்தது.கப்பலைப் போன்று இலை குளத்தின் தண்ணீரில் மிதந்து,கரையை அடைந்தது. பின்னர் கட்டெறும்பு இலையிலிருந்து கீழே இறக்கி தரையை அடைந்தது.குருவியைக் கண்ட கட்டெறும்பு, குருவியிடம்"நண்பனே என் ஆபத்தில் எனக்கு உதவி செய்து எனது உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி, இந்த உதவியை நான் என் உயிருள்ளவரை மறவேன் " என்று கூறி விடைபெற்றது. சிறிது காலம் கழிந்த பின் காலை நேரத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜கட்டெறும்பு தன் கூட்டத்தோட...