ஒரு ஊரில் 👧கவிதா , 👧சீதா என்ற இரு பெண்கள் நண்பர்களாக இருந்து வந்தார்கள். இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க, ஒருநாள் கவிதா, "நாம் ஏதாவது தொழில் செய்து , அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்" என்று கூறினாள், சீதாவும் " சரி நல்ல யோசனை சாலையோரத்தில், நாம் இட்லி கடை வைப்போம் , இருவரும் வேலைகளை பிரித்து செய்வோம், நான் இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருகிறேன், நீங்கள் இட்லி தயார் செய்து கொடுங்கள், நான் நம் கடைக்கு வரும் அனைவருக்கும் இட்லியை எடுத்து தட்டில் வைத்து தருகிறேன்" என்றாள். கவிதா " சரி" என்று கூறினாள். மறுநாள் காலையில் இருவரும் கடையை ஆரம்பித்து சீதா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி வந்தாள், கவிதா இட்லி தயார் செய்தாள், சீதா கடைக்கு வருகை தருபவர்களுக்கு அன்புடன் உணவை பரிமிறினாள், தங்கள் வேலையை இருவரும் சரியாக செய்தார்கள், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையிலேயே இட்லி சாப்பிட்டார்கள், லாபமும் அதிகரித்தது, இருவரும் கிடைத்த பணத்தை பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக வாழ இவ்வாறு நாட்கள் பல கழித்ததும், கவிதா" நான் இதை போன்று வேறு கடை வைத்தால், கடையில் வரும் லாபம் அனைத்தையும் சீதாவுடன் பகிராமல் நாம் அதிக பணத்தை ஈட்ட முடியும்" என்று எண்ணி அடுத்த நாள் மற்றொரு கடையை தனியாக ஆரம்பித்தாள். சீதா , கவிதா வேறொரு கடை வைத்ததை அறிந்து வேறொரு பெண்ணை இட்லி செய்வதற்கு வேலையாளாக சேர்த்தாள். இருவரும் தனித்தனியாக பிரிந்து கடைகள் நடத்துவதால் மக்கள் அனைவரும் இருவர் கடையிலும் இட்லி சாப்பிட ஆரம்பித்தார்கள். கவிதா, அனைத்து வேலையையும் ஒருத்தியே செய்ததால் மிகவும் சோர்வடைந்து கடைக்கு வரும் வாடிக்கையாளை அன்போடு கவனிக்க இயலாமல் போக, அதனால் மக்கள் அனைவரும் சீதாவின் கடைக்கு செல்ல ஆரம்பித்தார்கள், கவிதாவின் கடைக்கு இப்போது யாரும் வருவதில்லை. அப்போது தான் கவிதா, " நான் தனியாக கடை ஆரம்பித்து மிகவும் தவறு செய்துவிட்டேன், சீதாவுடன் சேர்ந்தே இருந்திருந்தால் வேலையையும் பகிர்ந்து, லாபத்தையும் பகிர்ந்திருக்கலாம் இப்போது என் கடைக்கு யவரும் வருவதில்லை என்று மனமுடைந்து இனிமேல் நம் வாழ்வில் பேராசை படக்கூடாது " என்று தன் தவறை உணர்ந்தாள்.
நீதி- "பேராசை பெருநஷ்டம்" என்பது போல் பேராசை பட்டால் நாம் நம்மிடம் இருப்பதையும் இழக்க நேரிடும். அதனால் நாம் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து அனைத்தையும் பகிர்ந்து, அன்பாக சுயநலமில்லாமல் வாழ்ந்தால் நம் வாழ்வு செழிக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக