முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேராசை பெருநஷ்டம்

 ஒரு ஊரில் 👧கவிதா , 👧சீதா என்ற இரு பெண்கள் நண்பர்களாக இருந்து வந்தார்கள். இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க, ஒருநாள் கவிதா, "நாம் ஏதாவது தொழில் செய்து , அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்" என்று கூறினாள், சீதாவும் " சரி நல்ல யோசனை சாலையோரத்தில், நாம் இட்லி கடை வைப்போம் , இருவரும் வேலைகளை பிரித்து செய்வோம், நான் இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருகிறேன், நீங்கள் இட்லி தயார் செய்து கொடுங்கள், நான் நம் கடைக்கு வரும் அனைவருக்கும் இட்லியை  எடுத்து தட்டில் வைத்து தருகிறேன்" என்றாள். கவிதா " சரி" என்று கூறினாள். மறுநாள் காலையில் இருவரும் கடையை ஆரம்பித்து சீதா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கி வந்தாள், கவிதா இட்லி தயார் செய்தாள், சீதா கடைக்கு வருகை தருபவர்களுக்கு அன்புடன் உணவை பரிமிறினாள், தங்கள் வேலையை இருவரும் சரியாக செய்தார்கள், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையிலேயே இட்லி சாப்பிட்டார்கள், லாபமும் அதிகரித்தது, இருவரும் கிடைத்த பணத்தை பகிர்ந்து கொண்டு  சந்தோஷமாக வாழ இவ்வாறு நாட்கள் பல கழித்ததும், கவிதா" நான் இதை போன்று வேறு கடை வைத்தால், கடையில் வரும் லாபம் அனைத்தையும் சீதாவுடன் பகிராமல் நாம் அதிக பணத்தை ஈட்ட முடியும்" என்று எண்ணி அடுத்த நாள் மற்றொரு கடையை தனியாக ஆரம்பித்தாள். சீதா , கவிதா வேறொரு கடை வைத்ததை அறிந்து வேறொரு பெண்ணை இட்லி செய்வதற்கு வேலையாளாக சேர்த்தாள். இருவரும் தனித்தனியாக பிரிந்து கடைகள் நடத்துவதால் மக்கள் அனைவரும்  இருவர் கடையிலும் இட்லி சாப்பிட ஆரம்பித்தார்கள். கவிதா, அனைத்து வேலையையும் ஒருத்தியே செய்ததால் மிகவும் சோர்வடைந்து கடைக்கு வரும் வாடிக்கையாளை அன்போடு கவனிக்க இயலாமல் போக, அதனால் மக்கள் அனைவரும் சீதாவின் கடைக்கு செல்ல ஆரம்பித்தார்கள், கவிதாவின் கடைக்கு இப்போது யாரும் வருவதில்லை. அப்போது தான் கவிதா, " நான் தனியாக கடை ஆரம்பித்து மிகவும் தவறு செய்துவிட்டேன், சீதாவுடன் சேர்ந்தே இருந்திருந்தால் வேலையையும் பகிர்ந்து, லாபத்தையும் பகிர்ந்திருக்கலாம் இப்போது என் கடைக்கு யவரும்  வருவதில்லை என்று மனமுடைந்து இனிமேல் நம் வாழ்வில் பேராசை படக்கூடாது " என்று தன் தவறை உணர்ந்தாள்.

நீதி- "பேராசை பெருநஷ்டம்" என்பது போல் பேராசை பட்டால் நாம் நம்மிடம் இருப்பதையும் இழக்க நேரிடும். அதனால் நாம் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து அனைத்தையும் பகிர்ந்து, அன்பாக சுயநலமில்லாமல் வாழ்ந்தால் நம் வாழ்வு செழிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...