முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினை விதைத்தவன் தினை அறுப்பான்,ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.

 ஒரு நாள் 🐜கட்டெறும்பு மரத்தில் ஏறிக் கொண்டிருந்த போது பலமான காற்று வீசியது. காற்றையும் மழையையும் எதிர்கொள்ள முடியாமல் கட்டெறும்பு மரத்தடியில் உள்ள குளத்தில் விழுந்தது.கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.🐦குருவி ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு, இறக்கும் தருவாயில் இருக்கும் கட்டெறும்பைப் பார்த்தது.பார்த்த உடனே மரத்தின் கிளையில் இருக்கும் இலையை பறித்து கீழே உள்ள குளத்தில் கட்டெறும்பை நோக்கி வீசியது.அந்த இலை குளத்தில் தண்ணீரில் விழுந்தது.இலை தண்ணீரின் மேலே மிதப்பதை கண்ட கட்டெறும்பு தன் முயற்சியால் முயன்று இலையின் மேலே ஏறி அமர்ந்தது.கப்பலைப் போன்று இலை குளத்தின் தண்ணீரில் மிதந்து,கரையை அடைந்தது. பின்னர் கட்டெறும்பு இலையிலிருந்து கீழே இறக்கி தரையை அடைந்தது.குருவியைக் கண்ட கட்டெறும்பு, குருவியிடம்"நண்பனே என் ஆபத்தில் எனக்கு உதவி செய்து எனது உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி, இந்த உதவியை நான் என் உயிருள்ளவரை மறவேன் " என்று கூறி விடைபெற்றது. சிறிது காலம் கழிந்த பின் காலை நேரத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜கட்டெறும்பு தன் கூட்டத்தோடு எப்பொழுதும் போல் உணவு தேடிச் செல்லும் வழியில் வேடன் ஒருவனைக் கண்டது. அந்த வேடன் மரத்தின் கிளையில் அமர்ந்த குருவியை நோக்கி அம்பு எய்த தொடங்குவதை கண்ட கட்டெறும்பு தன் உயிரைக் காப்பாற்றிய குருவியை வேடனிடமிருந்து காக்கும் பொருட்டு, தன் கூட்டத்தோடு சேர்ந்து வேடனின் கால்களை கடித்து வைத்தது. உடனே வேடன் எறும்பின் கடியை பொறுத்துக் கொள்ள இயலாமல் கையிலிருந்த அம்பை கீழே போட்டுவிட்டு கால்களை உதற ஆரம்பித்தார். அப்போது வேடன் கால்களை உதறுவதையும்,அம்பு தரையில் கிடப்பதை கண்ட குருவி, கட்டெறும்பு தான் நன்றி மறவாமல் தன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளது என்பதனை சூசகமாக அறிந்த பின் கட்டெறும்புக்கு நன்றி தெரிவித்து, அந்த இடத்தை விட்டு பறந்து வேடனிடமிருந்து தப்பிச் சென்றது. 


நீதி-  "காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது",என்பதுபோன்று ஆபத்து நேரத்தில் குருவி கட்டெறும்புக்கு உதவியது. "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது", என்றவாறு எந்தவொரு பிரதிபலிப்பும் எதிர்பாராமல் குருவி கட்டெறும்பிற்கு உதவியது.
              "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்",என்பது போல குருவி செய்த உதவியை கட்டெறும்பு மிகப் பெரியதாய் எண்ணியது. "உப்பிட்டவரை உள்ளளவும் நினை","ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை","நன்றி மறப்பது நன்றன்று","எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு",என்பதை உணர்ந்து கட்டெறும்பு குருவி செய்த உதவியை என்று மறவாமல் இருந்தது.
              "தினை விதைத்தவன் தினை அறுப்பான்",என்பதைப் போன்று குருவி முன்னொரு காலத்தில் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்த உதவி பின்னொருநாள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்துக் காலத்தில் கட்டெறும்பின் மூலம் உதவியைப் பெற்றது.                       எனவே நாம் நமக்கு ஒருவர் செய்த உதவியை என்றும் மறவாமல் இருப்போம். வாய்ப்புக் கிடைத்தால் உதவி செய்தவருக்கு பதிலுதவியாகத் தம்மால் இயன்ற அளவாவது உதவி செய்வோம்.நாம் ஒருவருக்கு எதை செய்கின்றோமோ அதுவே பின்னொரு நாள் நம்மை வந்து அடையும்.ஆதலால் என்றும் பிறருக்கு நன்மையே செய்வோம்,அதுவே நம் ஆபத்துக்காலத்தில் நம்மை வந்து காக்கும். ஆகவே,"நன்மையை விதைத்து நன்மையையே அறுவடை செய்வோம்".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...