ஊரில் 👦ராஜா, 👨மகேஷ் என்ற இரு நண்பர்கள் ஒன்றினைந்து 🌾🌾🌾🌾விவசாயத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ராஜா விவசாயம் செய்யாமல் கடவுளின் அருளால் விவசாயம் செழிக்கும் என்று எண்ணி விவசாயம் செய்யாமல் அருகிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வேண்டி வந்தார்.ஆனால் மகேஷ் ஒருவரே விவசாய நிலத்தில் கடுமையாக உழைத்து பயிர்களை விளைவித்தார்.சிறிது நாட்கள் கழித்து செழிப்பாக விளைந்த பயிர்களை மகேஷ் அறுவடை செய்து சந்தையில் விற்று வந்தார். ராஜா "விவசாயத்தில் வந்த லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ளலாம்" என்று மகேஷிடம் கூறினார். அதற்கு மகேஷ் "லாபத்தை பகிர எனக்கு விருப்பமில்லை, நான் மட்டுமே உழைத்ததால் லாபம் எனக்கு மட்டும் தான் " என்றார். இதை கேட்ட ராஜா "நான் கடவுளை வழிபட்டதால் தான் விவசாயத்தில் லாபம் கிடைத்தது" என்றார். இருவரும் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து நடந்தவற்றை கூறி "யாரால் விவசாயத்தில் லாபம் கிடைத்தது? " என்று நீங்களே தீர்ப்பு வழங்குங்கள், என்றார்கள். பஞ்சாயத்து தலைவர் இருவரிடமும் இரு நெல் மூட்டைகளை கொடுத்து,"மறுநாள் காலையில் நெல்லை உரலில் இடித்து அரிசி பருக்கைகளை கொண்டு வாருங்கள்" என்றார். இரவில் ராஜா கடவுளை வழிபட்டு தூங்கினார், ஆனால் மகேஷ் இரவு முழுவதும் கண் விழித்து நெல்லை உரலில் இடித்தார். காலையில் இருவரும் நெல் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்தார்கள். தலைவர் இருவரின் நெல் மூட்டைகளை பார்த்துவிட்டு "ராஜா, கடவுளை வணங்குவதால் மட்டுமே நெல் இடிக்கப்படாமல் அரிசியாகாது" என்றார். மகேஷ் "என் உழைப்பால் ஒரு மூட்டை நெல்லை மட்டுமே இடித்து அரிசியாக்க முடிந்தது"என்றார். அதற்கு தலைவர் "கடவுளின் அருள் இருந்திருந்தால் 2 மூட்டை நெல்லையும் மகேஷால் இடித்திருக்க முடியும், ஆகவே எனது தீர்ப்பு யாதெனில் விவசாய நிலத்தில் உழைத்தால் தான் பயிர்களை விளைவிக்க முடியும், மேலும் கடவுளையும் வணங்குங்கள் அப்போது தான் மழை பெய்து விவசாயம் செழிக்கும்" என்றார். இதனை கேட்டவுடன் ராஜா, மகேஷ் இருவரும் இணைந்து தங்கள் தவறுகளை உணர்ந்து "நாம் இனிவரும் காலங்களில் விவசாயத்தில் இருவரும் உழைத்து, இருவரும் கடவுளை வணங்கி செல்வச் செழிப்புடன் வாழ்வோம் " என்றார்.
நீதி- " உழைப்பின்றி ஊதியம் இல்லை", என்றவாறு உழைக்காமல் ஊதியம் ஈட்ட முடியாது. உழைப்புடன் கடவுளை வணங்கி அருள் பெற்றால் மேலும் ஊதியம் உயர்வு பெறும். அதனால் நாம் கடவுளை வணங்கி அருள் பெற்று, உழைத்து செம்மையான வாழ்வை வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக