முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உழைப்பின்றி‌ ஊதியம் இல்லை.

 ஊரில் 👦ராஜா, 👨மகேஷ் என்ற இரு நண்பர்கள் ஒன்றினைந்து 🌾🌾🌾🌾விவசாயத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ராஜா விவசாயம் செய்யாமல் கடவுளின் அருளால் விவசாயம் செழிக்கும் என்று எண்ணி விவசாயம் செய்யாமல் அருகிலுள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வேண்டி வந்தார்.ஆனால் மகேஷ் ஒருவரே விவசாய நிலத்தில் கடுமையாக உழைத்து பயிர்களை விளைவித்தார்.சிறிது நாட்கள் கழித்து செழிப்பாக விளைந்த பயிர்களை மகேஷ் அறுவடை செய்து சந்தையில் விற்று வந்தார். ராஜா "விவசாயத்தில் வந்த லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ளலாம்" என்று மகேஷிடம் கூறினார். அதற்கு மகேஷ் "லாபத்தை பகிர எனக்கு விருப்பமில்லை, நான் மட்டுமே உழைத்ததால் லாபம் எனக்கு மட்டும் தான் " என்றார். இதை கேட்ட ராஜா "நான் கடவுளை வழிபட்டதால் தான் விவசாயத்தில் லாபம் கிடைத்தது" என்றார். இருவரும் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து நடந்தவற்றை கூறி "யாரால் விவசாயத்தில் லாபம் கிடைத்தது? " என்று நீங்களே தீர்ப்பு வழங்குங்கள், என்றார்கள். பஞ்சாயத்து தலைவர் இருவரிடமும் இரு நெல் மூட்டைகளை கொடுத்து,"மறுநாள் காலையில் நெல்லை உரலில் இடித்து அரிசி பருக்கைகளை கொண்டு வாருங்கள்" என்றார். இரவில் ராஜா கடவுளை வழிபட்டு தூங்கினார், ஆனால் மகேஷ் இரவு முழுவதும் கண் விழித்து நெல்லை உரலில் இடித்தார். காலையில் இருவரும் நெல் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்தார்கள். தலைவர் இருவரின் நெல் மூட்டைகளை பார்த்துவிட்டு "ராஜா, கடவுளை வணங்குவதால் மட்டுமே நெல் இடிக்கப்படாமல் அரிசியாகாது" என்றார். மகேஷ் "என் உழைப்பால் ஒரு மூட்டை நெல்லை மட்டுமே இடித்து அரிசியாக்க முடிந்தது"என்றார். அதற்கு தலைவர் "கடவுளின் அருள் இருந்திருந்தால் 2 மூட்டை நெல்லையும் மகேஷால் இடித்திருக்க முடியும், ஆகவே எனது தீர்ப்பு யாதெனில் விவசாய நிலத்தில் உழைத்தால் தான் பயிர்களை விளைவிக்க முடியும், மேலும் கடவுளையும் வணங்குங்கள் அப்போது தான் மழை பெய்து விவசாயம் செழிக்கும்" என்றார். இதனை கேட்டவுடன் ராஜா, மகேஷ் இருவரும் இணைந்து தங்கள் தவறுகளை உணர்ந்து "நாம் இனிவரும் காலங்களில் விவசாயத்தில் இருவரும் உழைத்து, இருவரும் கடவுளை வணங்கி செல்வச் செழிப்புடன் வாழ்வோம் " என்றார்.

நீதி- " உழைப்பின்றி ஊதியம் இல்லை", என்றவாறு உழைக்காமல் ஊதியம் ஈட்ட முடியாது. உழைப்புடன் கடவுளை வணங்கி அருள் பெற்றால் மேலும் ஊதியம் உயர்வு பெறும். அதனால் நாம் கடவுளை வணங்கி அருள் பெற்று, உழைத்து செம்மையான வாழ்வை வாழ்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...