கிணற்றில் 🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸தவளைகள் தன் கூட்டத்துடன் வாழ்ந்து வந்தது. கூட்டத்தில் இருந்த ஒரு 🐸 தவளையை மற்ற தவளைகள் கேளிக்கை செய்தது. தன் நண்பர்கள் கேளிக்கை செய்ததை விளையாட்டாக கருதாமல் தன் குடும்பத்தை தவிர மற்ற அனைத்து தவளைகளையும் பலி வாங்க வேண்டும் என்ற வஞ்சம் கொண்டு பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்றது. பாம்பிடம் அந்த தவளை 🐸 "நீங்கள் எங்கள் கிணத்திற்கு வருகை தந்து நான் கூறும் தவளைகளை நீங்கள் உண்ணலாம்" என்றது. இதை கேட்டவுடன் 🐍 பாம்பு தன் பசியைப் போக்க இதுவே சிறந்த வழி என்று நினைத்து "சரி வருகிறேன்" என்றது. அதற்கு தவளை பாம்பிடம் "மிக்க நன்றி பாம்பே, ஆனால் ஒரு ஒப்பந்தம், நீங்கள் நான் கூறும் தவளையை மட்டும் தான் உண்ண வேண்டும் என்று கூறியது. பாம்பு " இந்த ஒப்பந்தத்திற்கு நான் சம்மதிக்கிறேன்" என்றது. தவளை பாம்பை கிணற்றில் உள்ள ஒரு துளையின் வழியாக கிணற்றிற்குள் அழைத்துச் சென்றது. பாம்பு தவளையின் பேச்சை கேட்காமல் அனைத்து தவளைகளையும் தினமும் ஒரு தவளை என்ற விகிதத்தில் அழைத்து வந்த தவளையின் குடும்பத்தையும் உண்டது. இறுதியில் அந்த ஒரு தவளை பாம்பிடம் " ஏன் என் குடும்பத்தையும் உண்டாய், நீங்கள் என் ஒப்பந்தத்தை மீறி விட்டீர்கள் " என்று கூறியது. அதற்கு பாம்பு "நான் என்ன செய்வேன் என் பசியாற்றவே நான் தவளைகளை உண்டேன், இப்போது கூட எனக்கு பசிக்கிறது நான் உங்களை உண்ணலாமா? "என்றது. இதை கேட்ட அந்த தவளை பயந்து " நான் உங்கள் பசியாற ஒன்று செய்கிறேன் நீங்கள் இங்கேயே இருங்கள்" என்று கூறியவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று பாம்பிடம் தப்பித்து வேறு இடத்திற்கு சென்றடைந்து நான் செய்தது மிகப்பெரிய தவறாகும், அதனால் என் குடும்பத்தையும் இழந்து விட்டேன் என்று அழுதது. மேலும் "நான் மற்ற தவளைகளை பலி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் என் குடும்பத்தை நானே பழி கொடுத்து விட்டேன் மற்றவர்களுக்கு கெட்டது நினைத்தால் தமக்கே வரும் என்பதை அறிந்து கொண்டேன் , இனிமேல் நான் யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டேன் " என்று அழுது புலம்பியது.
நீதி- "சிந்தித்து செயல்படு", என்றவாறு நாம் ஒரு செயலை செய்யும் முன் அந்த செயலால் வரும் நன்மை, தீமை ஆகியவற்றை எண்ணிப் பார்த்த பின்னரே அச்செயலை செய்ய வேண்டும் , இவ்வாறு செய்யாததால் தான் தவளை தன் குடும்பத்தை இழக்க நேரிட்டது. "நினைக்கும் கேடு தனக்கே வரும்" என்பது போல் ஆனது. ஆகவே நாம் அனைவரும் நல்லதை மட்டுமே நினைத்து நல்லவற்றையே செய்வோம் அதுவே நல்லதாய் நடக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக