🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾வயலில் அனைத்து 🐂🐃🐃🐃🐂🐂🐄🐄🐂🐂🐮🐮🐄🐄மாடுகளும் 🌾🌾🌾🌾🌾🌾🌾புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒரு 🐄மாடு மட்டும் தன் தலையைத் தூக்கிப் பார்த்து சிறிது தூரத்திலுள்ள அந்த வயலில் தான், தான் இருக்கும் வயலில் உள்ள புல்லை விட உயரமாகவும் அதிகமாகவும் உள்ளது என்று நினைத்து கண்ணுக்கு எட்டிய தூரத்திலுள்ள வயலை சென்றடைந்தது. மாடு புல் மேய்ந்தபின் " முதலில் நாம் எந்த வயலில் இருந்து இந்த வயலுக்கு வந்தோமோ அந்த வயலைப் போல்தான் புற்கள் இங்கும் உள்ளது ,மேலும் இங்கிருந்து பார்ப்பதற்கு நாம் முன்பிருந்த வயலில் உள்ள புல் அதிகமாகவும் உயரமாகவும் உள்ளது" என்று எண்ணியது.
நீதி- நாம் இருக்கும் இடத்தில் ஏதாவது கஷ்டம் வந்தால், மற்றவர்களுக்கு கஷ்டம் இல்லை தமக்கு மட்டுமே கஷ்டம் வருகிறது, "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்பதை போன்று இந்த இடத்தில் இருப்பதால் தான் பிரச்சினை வேறு இடத்திற்கு சென்றால் பிரச்சினை இல்லை என்று எண்ணுவது தவறு. பிரச்சினைகள், கஷ்டங்கள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை எங்கு இருந்தாலும் பிரச்சனைகள் வருவது இயல்பே, பிரச்சனைகளை சமாளித்து கொள்ள தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, சிந்தித்து செயல்படுவது ஆகியன கொண்டு தீர்வு காண்பதே சரியானதாகும். பிரச்சினைகளிலிருந்து விலகி ஓடுவது சரியானதல்ல, பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவதே சிறந்தது. அதனால் நமக்கு வரும் தடைகள், பிரச்சினைகளை நாம் பயம் இல்லாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக