ஒரு கிராமத்தில் 🐐அம்மா ஆடு, தன் இரண்டு குட்டி 🐐🐐 ஆடுகளுடன் வாழ்ந்து வந்தது. அம்மா ஆடு தன் குட்டிகளுடன் "நான் உணவு தேடிச் செல்கிறேன், பத்திரமாக இருங்கள், அருகிலுள்ள காட்டுக்குச் செல்லக்கூடாது, நான் வரும் வரை இந்த இடத்திலேயே இருங்கள்" என்று கூறிச் சென்றது.அதுசமயம் ஒரு குட்டி ஆடு உறங்கியது.மற்றொரு குட்டி ஆடு 🦋பட்டாம்பூச்சியைப் பார்த்தது. தன் தாய் ஆடு சொன்னதை மறந்து பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்து சென்று காட்டின் நடுப்பகுதியை அடைந்தது. அம்மா ஆடு உணவு எடுத்து வீட்டுக்கு வந்தது. ஒரு குட்டி ஆடு மட்டும் இருப்பதை கண்டு வேதனையில் மற்றொரு குட்டி ஆட்டை தேடி காட்டை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது.,அந்த குட்டி ஆட்டை காட்டிலுள்ள 🐺🐺🐺🐺🐺🐺🐺 ஓநாய்கள் கூட்டம் சுற்றிவளைத்தது. அதில் ஒரு ஓநாய் குட்டி ஆடு சாப்பிட சுவையாக இருக்கும், அது என் பிறந்த நாள் பரிசாக வந்துள்ளது என்றது. அப்போது தான் ஆடு தன் அம்மா ஆடு சொன்னதை கேட்காததால் இங்கு வந்து ஆபத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்து வேதனையுற்றது. அம்மா ஆடும் குட்டி ஆட்டை கண்டுபிடித்து , அருகில் வந்து ஓநாய்களுடன் "ஓநாய்களே தங்கள் வீரத்தை சிங்கத்திடம் காட்டுங்கள் கோழையாக இந்த குட்டி ஆட்டிடம் காட்டாதீர்கள், சின்ன ஆடு உங்கள் பசியை தீர்க்காது. அதனால் ஆட்டை விட்டுவிட்டு சிங்கத்தை வேட்டையாடுங்கள், சிங்கம் தான் உங்கள் அனைவருக்கும் சிறந்த விருந்தாக இருக்கும், அவ்வாறு செய்தால் உங்கள் ஓநாய்கள் கூட்டம் காட்டிற்கு ராஜாவாகலாம் "என்று கூறி ஓநாய்களின் பேராசையை தூண்டி விட்டு தன் குட்டி ஆட்டை காப்பாற்றி தன் குட்டி ஆட்டுடன் கிராமத்தை நோக்கி விரைந்து ஓடி, கிராமத்தை அடைந்து தன் இருப்பிடத்திற்கு வந்தது. உறங்கி எழுந்ததும் குட்டி ஆடு தன் அம்மா ஆட்டிடம் "எங்கு சென்றீர்கள் ? " என்று கேட்க , அம்மா ஆடு நடந்த அனைத்தையும் கூறி "நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டால் பயத்தை வெளியே காட்டாமல் தன் புத்திசாலித்தனத்தால் எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறியது. குட்டி ஆடு "நான் உங்கள் பேச்சை கேட்காதால் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன், அதனால் இனி நாங்கள் இருவரும் உங்கள் பேச்சை கேட்காமல் எங்கும் செல்ல மாட்டோம், அம்மா என்றும் உங்கள் பேச்சை கேட்டு நடப்போம்" என்று அம்மா ஆட்டிடம் கூறி , அதன்படி நடந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தது.
நீதி- "தாய் சொல்லைத் தட்டாதே" என்பது போல் குட்டி ஆடு காட்டிற்குள் தன் தாய் ஆட்டின் பேச்சை கேட்டு செல்லாமல் இருந்திருந்தால் ஓநாய்களிடம் மாட்டி வருந்தியிருக்காது. அதனால் என்றும் அம்மா சொல்வதை கேட்டு அதன்படி நடப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக