ஒருநாள் 🐄 மாடு காட்டில் உணவு உண்ணும் போது 🐅 புலி மாட்டை பார்த்தவுடன், புலிக்கு மாட்டை வேட்டையாடி உண்ண வேண்டும் என்று எண்ணி மாட்டை நோக்கி பாய்ந்து வந்தது. உடனே அந்த மாடு "புலியே நில், எனக்கு ஒரு கன்று குட்டி 🐮 பிறந்து 3 நாட்கள் தான் ஆனது, அந்த குட்டிக்கு உணவு தேடி உண்ண தெரியாது, அதனால் நான் என் குட்டிக்கு பால் கொடுத்து விட்டு , குட்டியிடம் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று கூறிவிட்டு இதே இடத்திற்கு வருகிறேன், அப்போது நீங்கள் என்னை உண்ணலாம் இப்போது கருணை காட்டுங்கள் நான் சென்று வருகிறேன் " என்று புலியிடம் கூறியது. அதற்கு புலி மாட்டிடம் " நீங்கள் புத்திசாலித்தனமாக என்னை ஏமாற்றப் பார்கின்றாய் நான் ஏமாறமாட்டேன் நான் ஒன்றும் ஏமாளி அல்ல " என்றது. அதற்கு மாடு "நான் என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவன் , நீங்கள் என்னை நம்பலாம், மேலும் நான் ஒன்றை கூறுகின்றேன் எனக்கு இறந்து விடுவோம் என்ற பயம் எனக்கில்லை, ஏனென்றால் என்றாவது ஒருநாள் இப்பூமியில் உள்ள அனைவரும் இறந்து தான் ஆக வேண்டும், நான் இறப்பதால் உங்கள் பசி தீரும் என்றால் நீங்கள் என்னை உண்ண மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன், அதற்குமுன் ஒருமுறை என் குட்டிக்கு பால் கொடுத்து, அறிவுரை கூறி விட்டு வருகிறேன் என்னை நம்புங்கள் என்றது. உடனே புலி "சரி நீங்கள் மனிதர்களுடன் ஒன்றாக வாழ்வதால் உங்கள் நேர்மையின் அளவு என்ன என்பதை பார்க்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள் " என்று மாட்டிடம் கூறியது. மாடு தன் வசிப்பிடம் நோக்கி வந்தடைந்ததும் தன் குட்டிக்கு பால் கொடுத்து குட்டியின் முகத்தை தன் நாக்கில் வருடி கொடுத்து, "குட்டியே இனி நீ பத்திரமாக உணவு தேடிச் சென்று உணவை உண்டு வாழ வேண்டும், அதுமட்டுமின்றி நீ என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும், அனைவருக்கும் உதவி செய்து நற்பெயரைச் பெற வேண்டும் என்று தன் குட்டியிடம் கூறிவிட்டு திரும்பவும் காட்டை நோக்கி புலியிடம் வந்து இப்போது என்னை நீங்கள் உண்ணலாம் என்றது. புலியோ "உங்கள் நேர்மையை கண்டு நான் வியக்கிறேன், சொன்ன வார்த்தையை காப்பாற்றி உண்மையாக நீங்கள் நடந்து கொண்டதால், அந்த உண்மைக்கு பரிசாக நான் உங்களை உண்ணப் போவதில்லை, உங்களைப் போன்று நேர்மையானவர்கள், நல்லவர்களை உண்டால் எனக்கு பாவம் வந்தடையும், என் பசியை போக்க வேறு ஏதாவது செய்து கொள்கிறேன், உங்களைப் போன்ற நல்லவர்கள் நீண்ட காலம் இப்பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும்" என்று மாட்டிடம் கூறியது. மாடு " மிக்க நன்றி புலியே என்று கூறி விட்டு தன் இருப்பிடத்தை அடைந்து தன் குட்டியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.
நீதி- "வாய்மையே வெல்லும்" என்பது போல் மாடு தன் நேர்மையாலும், வாய்மையாலும் வாழ்ந்து வந்ததால், அந்த உண்மை மாட்டை துன்பத்திலிருந்து தன்னைத் தானே காப்பாற்ற பெரிதும் துணை நின்றது. அதனால் நாம் என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்றி, நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்வோம், அதுவே நம்மை ஆபத்திலிருந்து காக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக