முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாய்மையே வெல்லும்.

 ஒருநாள் 🐄 மாடு காட்டில் உணவு உண்ணும் போது 🐅 புலி மாட்டை பார்த்தவுடன், புலிக்கு மாட்டை வேட்டையாடி உண்ண வேண்டும் என்று எண்ணி மாட்டை நோக்கி பாய்ந்து வந்தது. உடனே அந்த மாடு "புலியே நில், எனக்கு ஒரு கன்று குட்டி 🐮 பிறந்து 3 நாட்கள் தான் ஆனது, அந்த குட்டிக்கு உணவு தேடி உண்ண தெரியாது, அதனால் நான் என் குட்டிக்கு பால் கொடுத்து விட்டு , குட்டியிடம் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்று கூறிவிட்டு இதே இடத்திற்கு வருகிறேன், அப்போது நீங்கள் என்னை உண்ணலாம் இப்போது கருணை காட்டுங்கள் நான் சென்று வருகிறேன் " என்று புலியிடம் கூறியது. அதற்கு புலி மாட்டிடம் " நீங்கள் புத்திசாலித்தனமாக என்னை ஏமாற்றப் பார்கின்றாய் நான் ஏமாறமாட்டேன் நான் ஒன்றும் ஏமாளி அல்ல  " என்றது. அதற்கு மாடு "நான் என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவன் , நீங்கள் என்னை நம்பலாம், மேலும் நான் ஒன்றை கூறுகின்றேன் எனக்கு இறந்து விடுவோம் என்ற பயம் எனக்கில்லை, ஏனென்றால் என்றாவது ஒருநாள் இப்பூமியில் உள்ள அனைவரும் இறந்து தான் ஆக வேண்டும், நான் இறப்பதால் உங்கள் பசி தீரும் என்றால் நீங்கள் என்னை உண்ண மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன், அதற்குமுன் ஒருமுறை என் குட்டிக்கு பால் கொடுத்து, அறிவுரை கூறி விட்டு வருகிறேன் என்னை நம்புங்கள் என்றது. உடனே புலி "சரி நீங்கள் மனிதர்களுடன் ஒன்றாக வாழ்வதால் உங்கள் நேர்மையின் அளவு என்ன என்பதை பார்க்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள் " என்று மாட்டிடம் கூறியது. மாடு தன் வசிப்பிடம் நோக்கி வந்தடைந்ததும் தன் குட்டிக்கு பால் கொடுத்து குட்டியின் முகத்தை தன் நாக்கில் வருடி கொடுத்து, "குட்டியே இனி நீ  பத்திரமாக உணவு தேடிச் சென்று உணவை உண்டு வாழ வேண்டும், அதுமட்டுமின்றி நீ என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும், அனைவருக்கும் உதவி செய்து நற்பெயரைச் பெற வேண்டும் என்று  தன் குட்டியிடம் கூறிவிட்டு திரும்பவும் காட்டை நோக்கி புலியிடம் வந்து இப்போது என்னை நீங்கள் உண்ணலாம் என்றது. புலியோ "உங்கள் நேர்மையை கண்டு நான் வியக்கிறேன், சொன்ன வார்த்தையை காப்பாற்றி உண்மையாக நீங்கள்  நடந்து கொண்டதால், அந்த உண்மைக்கு பரிசாக நான் உங்களை உண்ணப் போவதில்லை, உங்களைப் போன்று நேர்மையானவர்கள், நல்லவர்களை உண்டால் எனக்கு பாவம் வந்தடையும், என் பசியை போக்க வேறு ஏதாவது செய்து கொள்கிறேன், உங்களைப் போன்ற நல்லவர்கள் நீண்ட காலம் இப்பூமியில் சந்தோஷமாக வாழ வேண்டும்" என்று மாட்டிடம் கூறியது. மாடு " மிக்க நன்றி புலியே என்று கூறி விட்டு தன் இருப்பிடத்தை அடைந்து தன் குட்டியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது.

நீதி- "வாய்மையே வெல்லும்"  என்பது போல் மாடு தன் நேர்மையாலும், வாய்மையாலும் வாழ்ந்து வந்ததால், அந்த உண்மை மாட்டை துன்பத்திலிருந்து தன்னைத் தானே காப்பாற்ற பெரிதும் துணை நின்றது. அதனால் நாம் என்றும் சொன்ன வார்த்தையை காப்பாற்றி, நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்வோம், அதுவே நம்மை ஆபத்திலிருந்து காக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...