குளத்தில் கொக்கும், 🐠🐟🐡🐋🎏🎏🎣 மீன்களும், 🦀நண்டும் வாழ்ந்து வந்தது. கொக்கு எப்பொழுதும் மீன்களைப் பிடித்து உணவாக உண்பதையே வழக்கமாக வைத்திருந்தது. ஒருநாள் கொக்கு மீன்களைப் பிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது என்று மனதில் எண்ணி தந்திரமான ஒரு திட்டத்தை தீட்டியது. அந்த திட்டத்தை செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி சோகமாக இருப்பது போல தன் முகபாவத்தை மாற்றி நடித்தது.கொக்கின் நடிப்பை அறியாத நண்டும், மீன்களும் "கொக்கே ஏன் சோகமாக உள்ளாய்?", என்று கேட்டது. அதற்கு கொக்கு "அருகிலுள்ள மனிதர்கள் இந்த குளத்தை மண்ணைக் கொண்டு மூடப்போவதாக கூறியதை நான் கேட்டேன்" என்று பொய் சொல்லியது. கொக்கு கூறியது போல் அருகில் வேறு எந்த குளமும் இல்லை.கொக்கு சொல்வதை உண்மை என நம்பி மீன்களும், நண்டும் வருந்தியது. உடனே கொக்கு "எனக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது, அதாவது அருகில் இக்குளத்தைப் போன்று ஒரு குளம் உள்ளதை நான் அறிவேன், நான் உங்களை காக்கும் பொருட்டு அருகிலுள்ள குளத்திற்கு உங்களை அழைத்துச் சென்று உதவுகிறேன்" என்றது. இதனை கேட்ட நண்டும், மீன்களும் கொக்கு உண்மையாகவே தங்களுக்கு உதவி செய்வதாக எண்ணி "எங்களை அந்த குளத்திற்கு அழைத்து சென்று எங்கள் உயிரை காப்பாற்று " என்று கூறியது. கொக்கு "முதலில் நான் உங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனைவரையும் அழைத்து சென்று அருகிலுள்ள குளத்தில் சேர்க்கின்றேன்" என்றது. மீன்களும், நண்டும் "சரி" என்றது. கொக்கு முதலில் மீன்கள் அனைத்தையும் தன் முதுகிலும் கழுத்திலும் ஏற்றிச் சென்று பறந்து அருகிலுள்ள மலை உச்சியை அடைந்து மீன்கள் அனைத்தையும் கீழே இறக்கிவிட்டு மீன்களை உண்டது. மறுநாள் குளத்திற்கு வந்த கொக்கு "நண்டே நான் மீன்கள் அனைத்தையும் பத்திரமாக குளத்திற்கு கொண்டு சேர்த்தேன், இன்று உன்னையும் குளத்திற்கு அழைத்து செல்கின்றேன்" என்று கூறி நண்டை ஏற்றிக்கொண்டு பறந்தது. கொக்கு நண்டை ஏற்றிச் செல்லும் வழியில், நண்டு மீன்களின் எலும்புகள் கிழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொக்கு அனைத்து மீன்களையும் கொத்தி தின்றதை சாதுர்யமாக உணர்ந்து கொக்கின் கழுத்தை நண்டு கடித்து கொக்கை கொன்று கொக்கிடமிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டது நண்டு.
நீதி- கொக்கு மீன்களை பிடித்து உண்பதற்கு சிரமம் கொண்டு அதற்கு பதிலாக அனைத்து மீன்களையும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தின்ன வேண்டும் என்று பேராசை கொண்டது."பேராசை பெருநஷ்டம்", என்பது போல் இறுதியில் கொக்கு இறந்தது.
கொக்கின் இயல்பு யாதெனில் எப்போதும் மீன்களையும், நண்டையும் பிடித்து உண்பதே அதனை அறிந்தும் கொக்கு தனக்கு உதவும் என்பதை நம்பி கொக்குடன் சென்றது மீன்கள், நண்டின் முட்டாள்தனம்."சிந்தித்து செயல்படு" என்றவாறு ஒருவரின் குணநலம் அறிந்து அவரால் எத்துன்பமும் தமக்கு நேராது என்பதை அறிந்து சிந்தித்த பின்னரே அவரை நம்பி உடன் செல்ல வேண்டும்.
நண்டு மீன்களின் எலும்புகளை கண்டவுடன் நடந்ததை அறிந்து கொக்கை கழுத்தில் கடித்து தன்னை காப்பாற்றிக் கொண்டது நண்டின் புத்திசாலித்தனம்.
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்","வினை விதைத்தவன் வினை அறுப்பான்","முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" , என்பது போல் கொக்கு மீன்களை கொன்றதால், கொக்கும் நண்டால் கொல்லப்பட்டது.
ஆகவே நாம் பேராசை கொள்ளாமலும், சிந்தித்து செயல்பட்டு தீயோர் சொல் கேளாமல் நல்லோர் நட்பை மட்டும் பெற்று, பிறருக்கு நன்மை செய்தால் பிற்காலத்தில் நாம் செய்த நன்மை நம்மை வந்தடையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக