முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

 குளத்தில் கொக்கும், 🐠🐟🐡🐋🎏🎏🎣 மீன்களும், 🦀நண்டும் வாழ்ந்து வந்தது. கொக்கு எப்பொழுதும் மீன்களைப் பிடித்து உணவாக உண்பதையே வழக்கமாக வைத்திருந்தது. ஒருநாள் கொக்கு மீன்களைப் பிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது என்று மனதில் எண்ணி தந்திரமான ஒரு திட்டத்தை தீட்டியது. அந்த திட்டத்தை செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று  எண்ணி சோகமாக இருப்பது போல தன் முகபாவத்தை மாற்றி நடித்தது.கொக்கின் நடிப்பை அறியாத நண்டும், மீன்களும் "கொக்கே ஏன் சோகமாக உள்ளாய்?", என்று கேட்டது. அதற்கு கொக்கு "அருகிலுள்ள மனிதர்கள் இந்த குளத்தை மண்ணைக் கொண்டு மூடப்போவதாக கூறியதை நான் கேட்டேன்" என்று பொய் சொல்லியது. கொக்கு கூறியது போல் அருகில் வேறு எந்த குளமும் இல்லை.கொக்கு சொல்வதை உண்மை என நம்பி மீன்களும், நண்டும் வருந்தியது. உடனே கொக்கு "எனக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது, அதாவது அருகில் இக்குளத்தைப் போன்று ஒரு குளம் உள்ளதை நான் அறிவேன், நான் உங்களை காக்கும் பொருட்டு அருகிலுள்ள குளத்திற்கு உங்களை அழைத்துச் சென்று உதவுகிறேன்" என்றது. இதனை கேட்ட நண்டும், மீன்களும் கொக்கு உண்மையாகவே தங்களுக்கு உதவி செய்வதாக எண்ணி "எங்களை அந்த குளத்திற்கு அழைத்து சென்று  எங்கள் உயிரை காப்பாற்று " என்று கூறியது. கொக்கு "முதலில் நான் உங்களை ஒன்றன் பின் ஒன்றாக அனைவரையும் அழைத்து சென்று அருகிலுள்ள குளத்தில் சேர்க்கின்றேன்" என்றது. மீன்களும், நண்டும் "சரி" என்றது. கொக்கு முதலில் மீன்கள் அனைத்தையும் தன் முதுகிலும் கழுத்திலும் ஏற்றிச் சென்று பறந்து அருகிலுள்ள மலை உச்சியை அடைந்து மீன்கள் அனைத்தையும் கீழே இறக்கிவிட்டு மீன்களை உண்டது. மறுநாள் குளத்திற்கு வந்த கொக்கு "நண்டே நான் மீன்கள் அனைத்தையும் பத்திரமாக குளத்திற்கு கொண்டு சேர்த்தேன், இன்று உன்னையும் குளத்திற்கு அழைத்து செல்கின்றேன்" என்று கூறி நண்டை ஏற்றிக்கொண்டு பறந்தது. கொக்கு நண்டை ஏற்றிச் செல்லும் வழியில், நண்டு மீன்களின் எலும்புகள் கிழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொக்கு அனைத்து மீன்களையும் கொத்தி தின்றதை சாதுர்யமாக உணர்ந்து கொக்கின் கழுத்தை நண்டு கடித்து கொக்கை கொன்று கொக்கிடமிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டது நண்டு.

நீதி- கொக்கு மீன்களை பிடித்து உண்பதற்கு சிரமம் கொண்டு அதற்கு பதிலாக அனைத்து மீன்களையும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் தின்ன வேண்டும் என்று பேராசை கொண்டது."பேராசை பெருநஷ்டம்", என்பது போல் இறுதியில் கொக்கு இறந்தது.

          கொக்கின் இயல்பு யாதெனில் எப்போதும் மீன்களையும், நண்டையும் பிடித்து உண்பதே அதனை அறிந்தும் கொக்கு தனக்கு உதவும் என்பதை நம்பி கொக்குடன் சென்றது மீன்கள், நண்டின் முட்டாள்தனம்."சிந்தித்து செயல்படு" என்றவாறு ஒருவரின் குணநலம் அறிந்து அவரால் எத்துன்பமும் தமக்கு நேராது என்பதை அறிந்து சிந்தித்த பின்னரே அவரை நம்பி உடன் செல்ல வேண்டும்.

                நண்டு மீன்களின் எலும்புகளை கண்டவுடன்  நடந்ததை அறிந்து கொக்கை கழுத்தில் கடித்து தன்னை காப்பாற்றிக் கொண்டது நண்டின் புத்திசாலித்தனம்.

               "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்","வினை விதைத்தவன் வினை அறுப்பான்","முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" , என்பது போல் கொக்கு மீன்களை கொன்றதால், கொக்கும் நண்டால் கொல்லப்பட்டது.

                ஆகவே நாம் பேராசை கொள்ளாமலும், சிந்தித்து செயல்பட்டு தீயோர் சொல் கேளாமல் நல்லோர் நட்பை மட்டும் பெற்று, பிறருக்கு நன்மை செய்தால் பிற்காலத்தில் நாம் செய்த நன்மை நம்மை வந்தடையும். 

            

            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...