முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம் பொன் போன்றது.

 👨ராமு, 👦சோமு இருவரின் வீடுகளும் அருகில் உள்ளது. இருவரும் நண்பர்கள், ஒரே பள்ளியில் கல்வி பயில்கின்றனர். ராமு தினமும் பள்ளியில் கற்ற கல்வியை வீட்டிலும் படிப்பவன், ஆனால் சோமு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும்  படிக்க விருப்பமில்லாமல் விளையாடுவான். பள்ளித் தேர்வு நாள் வருவதற்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராமு சோமுவிடம் "சோமு தேர்வு நாள் வருவதற்கு சில நாட்களே உள்ளது , அதனால் தேர்விற்கு படிக்கலாம்" என்று கூற, அதற்கு சோமு " நான் விளையாடச் செல்கிறேன் பின்பு படித்துக் கொள்கிறேன்" என்று படிப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தான். காலம் கழிந்தது தேர்வு நாள் மறுநாள் என்றானது. ராமு காலையிலிருந்து படிக்க ஆரம்பித்தான். சோமு தேர்வை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த ⚡இடி இடித்தது, 💨💨காற்று வீசியது, ⛈️மழை வரப் போகிறது என்பதை உணர்ந்து ராமு சோமுவிடம் " ராமு மழை வரப் போகிறது போலுள்ளது, மழை பெய்தால் 🌌🌒இரவில் 💡மின்சாரம் தடையாக வாய்ப்பு உள்ளது, எனவே விளையாடாமல் படிக்க வா சோமு" என்று கூற, சோமுவோ "⛈️மழை ஒன்றும் வராது "என்று கூறி  விளையாடிக் கொண்டிருந்தான். பலத்த காற்றுடன் ⛈️மழை பெய்ய இரவு நேரத்தில் 💡மின்சாரம் தடையானது. அப்போது தான் சோமு "நான் படிப்பதற்கு காலம் தாழ்த்தியது தவறு, ராமுவைப்போல் தினமும் படித்திருந்தால் நாளை தேர்வில் தேர்ச்சி பெறுமளவிற்காவது படித்திருந்திருக்கலாம், நான் நாளை தேர்வில் எப்படி படிக்காமல் தேர்ச்சி பெறுவது?, என்னால் படிக்க இயலவில்லையே!" என்று அழுது வருந்தினான். ராமு "அழாதே சோமு மெழுகுவர்த்தி ஏற்றி படி நானும் நான் கற்றதை உனக்கு கற்பிக்கிறேன்" என்று சோமுவிடம் கூறி ராமு படிப்பதற்கு உதவி செய்தான். மறுநாள் காலையில் இருவரும் பள்ளியில் தேர்வு எழுதினார்கள். பின் வீடுதிரும்பும் வழியில் ராமு "நான் இனிமேல் தினமும் படிப்பேன்  காலம் தாழ்த்த மாட்டேன், அன்றன்றைக்கு இருக்கும் படிப்பை, வேலையை அன்றைக்கே செய்து முடிப்பேன், காலமும் நேரமும் சென்றால் சென்ற காலமும் நேரமும் திரும்பப் பெற முடியாது என்பதை அறிந்தேன் , காலத்தின் அருமையை நான் உணர்ந்தேன்" என்று கூறி அவ்வாறே நடந்து ராமு, சோமு இருவரும் இன்பமாக வாழத் தொடங்கினார்கள்.

நீதி- " காலம் பொன் போன்றது", என்பதுபோல் காலத்தை சரியாக பயன்படுத்தி கிடைத்த நேரத்தில் ராமு படித்திருந்தால் தேர்வின் முந்தைய நாள் இரவில் அழ வேண்டியிருந்திருக்காது. ஆகவே நமக்கு கிடைத்த நேரத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எதற்கும்  அஞ்சாமல் துணிந்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...