காட்டில் 🦁சிங்கம்,🦒🦒🦒🦒🦒🦒🦒 ஒட்டகச்சிவிங்கிகள்,🦌🦌🦌🦌மான்கள்,🐰🐇🐰 முயல்கள்,🐒🐒🐒🐒🐒குரங்குகள் போன்ற விலங்குகள் வாழ்ந்து வந்தது. சிங்கம் தினமும் ஒரு விலங்கை வேட்டையாடி உண்டு மகிழ்ந்தது. அதனால் காட்டில் உள்ள விலங்குகள் ஒவ்வொரு நாளும் இன்று நாம் சிங்கத்திற்கு இரையாகி விடுவோமோ இல்லையா என்று தவிப்புடன் வாழும் நாட்களை மகிழ்ந்து வாழாமல் இருந்தது.அப்போது ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை தவிர ஏனைய அனைத்து விலங்குகளுடன் ஆலோசித்து "தினமும் சிங்கத்திற்கு பலியாகி விடுவோம் என்று பயந்து வாழ்வதை காட்டிலும் , சிங்கத்திற்கு ஒவ்வொரு நாள் ஒருத்தர் என தாமே முன்வந்து இரையாகி விடுவோம் அப்போதுதான் வாழும் நாட்களை பயம் இல்லாமல் வாழ முடியும்" என்று முடிவெடுத்தது. சிங்கத்திடம் இந்த முடிவை ஒட்டகச்சிவிங்கி கூறியது, சிங்கமும் வயதான காரணத்தால் வேட்டையாடுவதற்கு சிரமப்படுவதால் இந்த முடிவை ஒப்புக் கொண்டது.தினமும் ஒரு விலங்கு சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்து சிங்கத்திற்கு இரையாகியது. அந்நிலையில் முயல் சிங்கத்திற்கு இரையாகும் நேரம் வந்தது. முயலோ தான் சிங்கத்திற்கு இரையாவதை விரும்பாமல் சிங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணி தந்திரமாக ஒரு திட்டத்தை வகுத்தது. முயல் தாமதமாக சிங்கம் இருக்கும் இடத்தை அடைந்தது. முயலின் தாமதத்தால் சிங்கம் முயலிடம் கோபம் கொண்டு "ஏன் தாமதமாய் வந்தாய் "என்று கர்ஜித்தது. அதற்கு முயல் "நான் வரும் வழியில் உங்களைப் போன்ற ஒரு சிங்கம் என்னை அழைத்தது நான் அதனிடம் எங்கள் ராஜா சிங்கத்திற்கு இரையாக சென்று கொண்டிருக்கின்றேன் என்று நான் கூற அந்த சிங்கம் "உங்கள் ராஜா வேட்டையாடி உண்ண சோம்பேறித்தனமாகவும் கோழையாகவும் உள்ளார் " என்றது. நான் ,"எங்கள் ராஜா வீரமானவர் "என்று கூற அந்த சிங்கம் "அப்படியானால் என்னுடன் உங்கள் ராஜா சிங்கத்தை அழைத்து வா" என்று கூறியது " என்று முயல் பொய் சொன்னது. இதனை கேட்ட சிங்கமும் உண்மை என நினைத்து கோபம் கொண்டு "என்னை அந்த சிங்கம் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்" என்று முயலிடம் கூறியது. முயலும் கிணற்றில் சிங்கம் உள்ளது என்று கூறி கிணற்றிற்கு சிங்கத்தை அழைத்து வந்து விட்டது. சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்து தன் பிம்பத்தை இன்னொரு சிங்கம் என்று எண்ணி முறைத்து கர்ஜித்தது, பிம்பமும் அவ்வாறே இருந்தது. அப்போதும் அது தன் பிம்பம் சிங்கம் கிடையாது என்பதை உணராமல் மற்றொரு சிங்கத்திடம் சண்டையிடுவதாக எண்ணி கிணற்றில் முட்டாள்தனமாக குதித்து இறந்தது. முயல் தன் சாதுர்யத்தால் தன்னையும் மற்ற விலங்குகளையும் சிங்கத்திடமிருந்து காப்பாற்றியது.
நீதி- "தீதும் நன்றும் பிறர் தர வாரா", என்பது போல் சிங்கம் தன் முட்டாள்தனத்தால் கிணற்றில் குதித்து தன்னை தானே கொன்று கொண்டது.முயல் சிறியதாக இருப்பினும் புத்தி கூர்மையால் தன்னை காக்கவும் , சிங்கத்திற்கு பாடம் புகட்டவும் "சிந்தித்து செயல்படு" என்பது போல் சிந்தித்து செயல்பட்டு தனது புத்திசாலித்தனத்தால் தன்னையும் பிற உயிரினங்களையும் சிங்கத்திடமிருந்து காத்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக