முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

 காட்டில் 🦁சிங்கம்,🦒🦒🦒🦒🦒🦒🦒 ஒட்டகச்சிவிங்கிகள்,🦌🦌🦌🦌மான்கள்,🐰🐇🐰 முயல்கள்,🐒🐒🐒🐒🐒குரங்குகள் போன்ற விலங்குகள் வாழ்ந்து வந்தது. சிங்கம் தினமும் ஒரு விலங்கை வேட்டையாடி உண்டு மகிழ்ந்தது. அதனால் காட்டில் உள்ள விலங்குகள் ஒவ்வொரு நாளும் இன்று நாம் சிங்கத்திற்கு இரையாகி விடுவோமோ இல்லையா என்று தவிப்புடன் வாழும் நாட்களை மகிழ்ந்து வாழாமல் இருந்தது.அப்போது ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை தவிர ஏனைய அனைத்து விலங்குகளுடன் ஆலோசித்து "தினமும் சிங்கத்திற்கு பலியாகி விடுவோம் என்று பயந்து வாழ்வதை காட்டிலும் , சிங்கத்திற்கு ஒவ்வொரு நாள் ஒருத்தர் என தாமே முன்வந்து இரையாகி விடுவோம் அப்போதுதான் வாழும் நாட்களை பயம் இல்லாமல் வாழ முடியும்" என்று முடிவெடுத்தது. சிங்கத்திடம் இந்த முடிவை ஒட்டகச்சிவிங்கி கூறியது, சிங்கமும் வயதான காரணத்தால் வேட்டையாடுவதற்கு சிரமப்படுவதால் இந்த முடிவை ஒப்புக் கொண்டது.தினமும் ஒரு விலங்கு சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்து சிங்கத்திற்கு இரையாகியது. அந்நிலையில் முயல் சிங்கத்திற்கு இரையாகும் நேரம் வந்தது. முயலோ தான் சிங்கத்திற்கு இரையாவதை விரும்பாமல்  சிங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணி தந்திரமாக ஒரு திட்டத்தை வகுத்தது. முயல் தாமதமாக சிங்கம் இருக்கும் இடத்தை அடைந்தது. முயலின் தாமதத்தால் சிங்கம் முயலிடம் கோபம் கொண்டு "ஏன் தாமதமாய் வந்தாய் "என்று கர்ஜித்தது. அதற்கு முயல் "நான் வரும் வழியில் உங்களைப் போன்ற ஒரு சிங்கம் என்னை அழைத்தது நான் அதனிடம் எங்கள் ராஜா சிங்கத்திற்கு இரையாக சென்று கொண்டிருக்கின்றேன் என்று நான் கூற அந்த சிங்கம் "உங்கள் ராஜா வேட்டையாடி உண்ண சோம்பேறித்தனமாகவும் கோழையாகவும் உள்ளார் " என்றது. நான் ,"எங்கள் ராஜா வீரமானவர் "என்று கூற அந்த சிங்கம் "அப்படியானால் என்னுடன் உங்கள் ராஜா சிங்கத்தை அழைத்து வா" என்று கூறியது " என்று முயல் பொய் சொன்னது. இதனை கேட்ட சிங்கமும் உண்மை என நினைத்து கோபம் கொண்டு "என்னை அந்த சிங்கம் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்" என்று முயலிடம் கூறியது. முயலும் கிணற்றில் சிங்கம் உள்ளது என்று கூறி கிணற்றிற்கு சிங்கத்தை அழைத்து வந்து விட்டது. சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்து தன் பிம்பத்தை இன்னொரு சிங்கம் என்று எண்ணி முறைத்து கர்ஜித்தது, பிம்பமும் அவ்வாறே இருந்தது. அப்போதும் அது தன் பிம்பம் சிங்கம் கிடையாது என்பதை உணராமல் மற்றொரு சிங்கத்திடம் சண்டையிடுவதாக எண்ணி கிணற்றில் முட்டாள்தனமாக குதித்து இறந்தது. முயல் தன் சாதுர்யத்தால் தன்னையும் மற்ற விலங்குகளையும் சிங்கத்திடமிருந்து காப்பாற்றியது.

நீதி- "தீதும் நன்றும் பிறர் தர வாரா", என்பது போல் சிங்கம் தன் முட்டாள்தனத்தால் கிணற்றில் குதித்து தன்னை தானே கொன்று கொண்டது.முயல் சிறியதாக இருப்பினும் புத்தி கூர்மையால் தன்னை காக்கவும் , சிங்கத்திற்கு பாடம் புகட்டவும் "சிந்தித்து செயல்படு" என்பது போல் சிந்தித்து செயல்பட்டு தனது புத்திசாலித்தனத்தால் தன்னையும் பிற உயிரினங்களையும் சிங்கத்திடமிருந்து காத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...