👦செல்வம் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், என்றும் அவன் சுறுசுறுப்பாக விளையாடுவான். அவன் இனிப்புகளையும் காரமான தின்பண்டங்களையும் அளவுக்கு மீறி உண்டு மகிழ்ந்து வந்தான். அதுமட்டுமின்றி அவன் உடலுக்கு சத்து சேர்க்கும், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை நிறுத்தினான். சில நாட்கள் கழித்து உடல் சோற்வுற்றான், முன்பு போல் அவனால் விளையாட முடியவில்லை. அவன் தன் தாயிடம் தன்னால் விளையாட இயலவில்லை என்று கூறினான். அதற்கு அவன் அம்மா "நீ சத்துமிகு பழங்கள், காய்கள் சாப்பிடாததாலும், தேவையான அளவு தண்ணீர் பருகாமல் , உடற்பயிற்சி செய்யாமல் தின்பண்டங்களை உண்டது தான் உன்னால் விளையாட இயலவில்லை, இனியாவது காய்கள், பழங்கள் சாப்பிடு, தின்பண்டங்கள் சாப்பிடாதே" என்று கூறினார். செல்வம் தன் தவறை உணர்ந்து தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்தான், பழங்கள்,காய்கள் சாப்பிட்டு தேவையான நீர் பருகி, உடற்பயிற்சி செய்தான். உடல் ஆரோக்கியம் பெற்று சந்தோஷமாக விளையாடி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.
நீதி- "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்", என்பது போல் 👦செல்வம், தன் தவறை உணர்ந்து சத்துமிகு காய்கள், பழங்கள் உண்டு, உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் பெற்றான். அதனால் நாமும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தின்பண்டங்களை படிப்படியாக குறைத்து நாளடைவில் நிறுத்திக் கொண்டு , பழங்கள் , காய்களை அதிகமாக உட்கொண்டு தேவையான நீர் பருகி , உடற்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் பெற்று சந்தோஷமாக வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக