காட்டில் 🐰 முயலும் 🐢 ஆமையும் நண்பர்களாக இருந்தது. ஒருநாள் முயல் ஆமையிடம் "நாம் ஓட்டப்பந்தயம் வைத்து நம்மில் யார் வலிமையானவர்? என்று தெரிந்து கொள்வோம்" என்றது. ஆமையும் "சரி" என்றது. அடுத்த நாள் முயல் ஆமையிடம் " தூரத்திலுள்ள அந்த மரத்தடியில் யார் முதலில் சென்றடைகின்றார்களோ! அவரே வெற்றியாளர் என்றது. சரி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கலாம் என்று கூறி இரண்டும் ஓடத்தொடங்கியது. சிறிது தூரம் ஓடிய பின் களைப்புற்ற முயல் "ஆமை மிகவும் மெதுவாக வருவதால் சிறிது நேரம் உறங்கி ஓய்வு பெற்று ஓடினாலும் நான் தான் வெல்வேன் " என்று மனதில் நினைத்துக்கொண்டு உறங்கியது. ஆமை தண்ணீரில் தான் வேகமாக செல்லும், இருப்பினும் தான் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெறுவோம் என்று நேர்மறை எண்ணம் கொண்டது. ஆமை தன் முயற்சியால் மெதுவாக சென்று முயல் உறங்கிய நேரத்தில் மரத்தடியை முதலில் சென்றடைந்தது. தூங்கி எழுந்ததும் முயல் , மரத்தடியில் ஆமை இருப்பதை கண்டவுடன், ஆமையை குறைவாக மதிப்பிடுதல் தவறு, முயற்சி செய்தால் தம்மால் செய்ய முடியாது என்ற ஒன்றையும் சிறப்பாக செய்து முடிக்கலாம் என்பதை உணர்ந்து மரத்...
குழந்தைகளுக்கான நீதிக் கதைகள், கட்டுரைகள், பழமொழிக் கதைகள் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான பண்பு நலன்களை சிறிய கதைகள் மூலம் எடுத்துரைக்கிறது.குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் திருக்குறள் மற்றும் பழமொழி கருத்துக்களை உள்ளடக்கியது. குழந்தைகளின் அறிவுத்திறனையும் நன்நடத்தையும் வளர்க்கும் நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.