முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முயற்சி திருவினையாக்கும், யாவரும் தனித்திறன் மிக்கவர்கள்.

 காட்டில் 🐰 முயலும் 🐢 ஆமையும் நண்பர்களாக இருந்தது. ஒருநாள் முயல் ஆமையிடம் "நாம் ஓட்டப்பந்தயம் வைத்து நம்மில் யார் வலிமையானவர்? என்று தெரிந்து கொள்வோம்" என்றது. ஆமையும் "சரி" என்றது. அடுத்த நாள் முயல் ஆமையிடம் " தூரத்திலுள்ள அந்த மரத்தடியில் யார் முதலில் சென்றடைகின்றார்களோ! அவரே வெற்றியாளர் என்றது. சரி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கலாம் என்று கூறி இரண்டும் ஓடத்தொடங்கியது. சிறிது தூரம் ஓடிய பின் களைப்புற்ற முயல் "ஆமை மிகவும் மெதுவாக வருவதால் சிறிது நேரம் உறங்கி ஓய்வு பெற்று ஓடினாலும் நான் தான் வெல்வேன் " என்று மனதில் நினைத்துக்கொண்டு உறங்கியது. ஆமை தண்ணீரில் தான் வேகமாக செல்லும், இருப்பினும் தான் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெறுவோம் என்று நேர்மறை எண்ணம் கொண்டது. ஆமை தன் முயற்சியால் மெதுவாக சென்று முயல் உறங்கிய நேரத்தில் மரத்தடியை முதலில் சென்றடைந்தது. தூங்கி எழுந்ததும் முயல் , மரத்தடியில் ஆமை இருப்பதை கண்டவுடன், ஆமையை குறைவாக மதிப்பிடுதல் தவறு, முயற்சி செய்தால் தம்மால்  செய்ய முடியாது என்ற ஒன்றையும் சிறப்பாக செய்து முடிக்கலாம் என்பதை உணர்ந்து மரத்...

மின்னுவதெல்லாம் பொன்னல்ல , யாரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.

 பாலைவனத்தில் ஒரு 🦓 வரிக்குதிரையும் , ஒரு 🐫 ஒட்டகமும் வசித்து வந்தது. வரிக்குதிரை தாம் தான் ஒட்டகத்தை விட அழகாக இருக்கின்றோம், அதனால் தாம் தான் சிறந்தவன் என்ற கர்வத்தோடு இருந்தது. ஒருநாள் ஒட்டகம் வரிக்குதிரையிடம் "நண்பா நாம் இருவரும் மண்ணில் விளையாடலாம் வா" என்று அழைத்தது. வரிக்குதிரையோ, ஒட்டகம் தம்மை போன்று அழகாக இல்லை, ஒட்டகம் தம்மோடு ஒப்பிடுகையில் தாழ்ந்தவன், தனக்கு  நண்பனாக இருக்க ஒட்டகம் தகுதியற்றவன் என்று மனத்திரையில் எண்ணிக்கொண்டது. வரிக்குதிரை, ஒட்டகத்திடம் "நான் மண்ணில் விளையாடினால் எனது உடலிலுள்ள அழகான வெள்ளை கருப்பு நிற கோடுகளில் மண் ஒட்டுவதோடு  அது என் அழகை கெடுக்கும், அழகுதான் முக்கியம் நான் விளையாட வர மாட்டேன்" என்றது. இதைக்கேட்ட ஒட்டகம் தான் மட்டும் மண்ணில் விளையாடி மகிழ்ந்தது. சிறிதுகாலம் கழித்து பாலைவனத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது, அருகிலிருந்த நீர்நிலைகள் வற்றின. வரிக்குதிரை அருந்த தண்ணீரின்றி தவித்தது. அப்போது தான் தன் அழகை மட்டும் வைத்து ஒன்றும் பயனில்லை என்று எண்ணி ஒட்டகத்திடம் "தாகமாக உள்ளது தயவுகூர்ந்து நிவ...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

ஒற்றுமையே வலிமை.

காட்டிலிருந்த வேடன் ஒருவன் 🐦🐦பறவைகளை தன் மத்திய உணவாக உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் மரத்தடியில் அரிசி பருக்கைகளை பரப்பிவிட்டு அருகிலுள்ள மரத்தினருகே பறவைகளுக்குத் தெரியாதவாறு ஒளிந்து கொண்டார். வானத்தில் பறவைகள் 🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦 கூட்டமாக சிறகடித்துப் பறந்து  கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் இருந்த சிறிய பறவை ஒன்று மரத்தடியில் அரிசி பருக்கைகளைக் கண்டது, உடனே அதனை ராஜா பறவையுடனும், ராணி பறவையுடனும்  சொன்னது. ராஜா பறவை அனைத்து பறவைகளையும் இதுதான் உணவு உண்ண சரியான தருணம் என்று கூறி அனைத்துப் பறவைகளுடன் மரத்தை நோக்கி பறந்தது. பறவைகள் மரத்தை அடைந்தவுடன் மரத்தடியில் அமர்ந்து அரிசி பருக்கைகளை உண்ண ஆரம்பித்தது. வேடன் திட்டமிட்டபடி நடந்தது. அருகிலிருந்த வேடன் இதனை கண்டவுடன் தன் கையிலிருந்த வலையை மரத்தடியை நோக்கி வீசினார். அந்த வலை அனைத்து பறவைகளையும் சிறைப்பிடித்தது. பறவைகள், வேடன் தங்களை நோக்கி வருகிறார் என்பதை கண்டுகொண்டது. ராணி பறவை தங்களை தாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அனைத்துப் பறவைகளுடனும் தாம் ஒரே நேரத்தில் பறந்தால் தான் வலையுடன் பறந்...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

           ஒரு காட்டில் 4 🐄🐄🐄🐄 மாடுகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த நான்கு மாடுகள் எப்பொழுதும் ஒன்றாகவே உணவு அருந்தும் , தூங்கும் இவ்வாறு ஒன்றை ஒன்று சிறிது நேரமும் பிரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது. அக்காட்டில் இதனுடன் 🦁 சிங்கமும், 🦊 நரியும் இருந்தது. சிங்கம் மாடுகளை வேட்டையாட ஒரு மாட்டின் பக்கம் வந்தது, உடனிருந்த 3 மாடுகளும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை துரத்திவிட்டு 4 மாடுகளும் முன்பு போல சந்தோஷமாக இருந்தது. இதனை கண்ட மிகுந்த பசியுள்ள நரி மாடுகள் ஒற்றுமையாக வாழ்வதால்தான் சிங்கம் மாடுகளை வேட்டையாட இயலவில்லை, 4 மாடுகளின் ஒற்றுமையை பிரிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது. 3 மாடுகள் உறங்கியதை கண்ட நரி 4ஆவது மாட்டிடம் நண்பா இந்த 3 மாடும் உனக்கு தெரியாமல் வேறொரு இடத்தில் உணவு உண்ண வேண்டும் என்று திட்டம் தீட்டியதை நான் கேட்டேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அடுத்த நாள் 4 ஆவது மாடு மற்ற 3 மாடுகளுடன் சண்டை யிட்டு பிரிந்து சென்றது. ஒற்றை மாட்டை கண்ட சிங்கம் அந்த 4ஆவது மாட்டை வேட்டையாடி தின்று சென்றது. சிங்கம் விட்டுச் சென்ற ...