முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முயற்சி திருவினையாக்கும், யாவரும் தனித்திறன் மிக்கவர்கள்.

 காட்டில் 🐰 முயலும் 🐢 ஆமையும் நண்பர்களாக இருந்தது. ஒருநாள் முயல் ஆமையிடம் "நாம் ஓட்டப்பந்தயம் வைத்து நம்மில் யார் வலிமையானவர்? என்று தெரிந்து கொள்வோம்" என்றது. ஆமையும் "சரி" என்றது. அடுத்த நாள் முயல் ஆமையிடம் " தூரத்திலுள்ள அந்த மரத்தடியில் யார் முதலில் சென்றடைகின்றார்களோ! அவரே வெற்றியாளர் என்றது. சரி ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கலாம் என்று கூறி இரண்டும் ஓடத்தொடங்கியது. சிறிது தூரம் ஓடிய பின் களைப்புற்ற முயல் "ஆமை மிகவும் மெதுவாக வருவதால் சிறிது நேரம் உறங்கி ஓய்வு பெற்று ஓடினாலும் நான் தான் வெல்வேன் " என்று மனதில் நினைத்துக்கொண்டு உறங்கியது. ஆமை தண்ணீரில் தான் வேகமாக செல்லும், இருப்பினும் தான் போட்டியில் முயற்சி செய்து வெற்றி பெறுவோம் என்று நேர்மறை எண்ணம் கொண்டது. ஆமை தன் முயற்சியால் மெதுவாக சென்று முயல் உறங்கிய நேரத்தில் மரத்தடியை முதலில் சென்றடைந்தது. தூங்கி எழுந்ததும் முயல் , மரத்தடியில் ஆமை இருப்பதை கண்டவுடன், ஆமையை குறைவாக மதிப்பிடுதல் தவறு, முயற்சி செய்தால் தம்மால்  செய்ய முடியாது என்ற ஒன்றையும் சிறப்பாக செய்து முடிக்கலாம் என்பதை உணர்ந்து மரத்தடியில் சென்று "ஆமையே நீங்கள் தான் வெற்றியாளன்" என்று கூறியது. அதன்பின் ஆமை "இன்று  நீங்கள் உறங்கியதால் நான் முயன்று வெற்றி பெற்றேன், இல்லையேல் நீங்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தூங்காமல் ஓடினால் என்றும் மண்ணில் என்னைவிட நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் எப்பவும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள்" என்றது. மறுநாள் ஓட்டப்பந்தயத்தில் முயல் நேற்று போல் உறங்காமல், வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஆமையை ஓட்டப்பந்தயத்தில் வென்றது. அடுத்த நாள் ஆமை "குளத்தில் ஓட்டப்பந்தயம் வைக்கலாம்" என்று கூறி போட்டியை ஆரம்பித்தது. முயலால் குளத்தில் பங்கேற்று போட்டியில் வெல்ல முடியவில்லை ஏனெனில் குளத்தில் இறங்கினால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடும், அதனால் முயல் குளத்தில் இறங்கவில்லை. குளத்தில் வைத்த போட்டியில் ஆமை தான் வென்றது. மறுநாள் இரண்டும் ஒருசேர ஏகமனதாக "நாம் இருவரும் வலிமையானவர்கள்"என்று கூறிக் கொண்டது. ஆமை முயலிடம் "மண்ணில் நீங்கள் தான் வெற்றியாளன், தண்ணீரில் நான் தான் வெற்றியாளன், தண்ணீரில் என் மீது ஏறுங்கள் இருவரும் வெற்றி பெறலாம்" என்று கூறியது. முயலும் "நீங்கள் கூறுவது சரிதான் மண்ணில் நீங்கள் வரும் வரை நான் காத்திருந்து இருவரும் ஒரே நேரத்தில் மரத்தடியை அடைந்து இருவரும் வெற்றி பெறுவோம், தண்ணீரில் உங்கள் உதவியால் இருவரும் வெற்றி பெறுவோம், என்று கூறியது. அடுத்த நாள் குளத்தில் முயல் ஆமை மீது பயணித்தும், மறுநாள் மண்ணில் ஆமை வரும் வரை காத்திருந்து பயணித்து ஒரே நேரத்தில் மரத்தடியை அடைந்து இரண்டும் இருவேறு திறமையையும் ஒன்றாக சேர்த்து ஒருவருக்கொருவர் உதவி செய்து போட்டியில் பங்கேற்றதால் இரண்டும் இரு இடங்களில் ஒன்றாக வெற்றி பெற்று மகிழ்ந்தது. 

நீதி- முதல் நாள் வைத்த போட்டியில் முயல் அலட்சியமாக ஆமையை குறைத்து மதிப்பிட்டு உறங்கியதால் போட்டியில் தோற்றது. ஆகையால் "எவரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது". ஆமை தன் திறமையால் முடியாது நான் போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தால் ஆமை தன் முயலாமையால் வென்றிருக்க முடியாது. ஆமையோ

"முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை

இன்மை புகுத்தி விடும். "என்ற நேர்மறை எண்ணத்தில் செயல்பட்டதால்  தன் திறமையால் வெல்ல முடியாததையும் தன் முயற்சியால் வெல்ல முடியும் என்று செயல்பட்டு அதனை நிரூபித்து முயலை வென்றது. இரண்டாவது நாள் போட்டியில் முயல் உறங்காமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தன் திறமையை வைத்து வெற்றி பெற்றது. மூன்றாம் நாள் ஆமை தன் திறமையால் குளத்தில் முயலை வென்றது. 

   இரண்டும் தனித்தனியாக பிரிந்து விளையாடியதால் முதல் மூன்று போட்டிகளில்  ஒருநாள் ஒருபோட்டியை ஒருத்தர் தான் வெல்ல முடிந்தது. இதிலிருந்து நாம் அறிவது யாதெனில் "முயல் ஒருநாள் ஜெயித்தால், ஆமையும் ஒருநாள் ஜெயிக்கும், ஆனால் முயலாமை என்றும் ஜெயிக்காது".நான்கு, ஐந்தாவது போட்டிகளில் இருவரும் ஒன்றாக தன் திறமையால் ஒருவரை ஒருவர் உதவி செய்து கொண்டதால் தான்  இருவரும் இருவேறு தன்மையுடையவர்களாய் இருப்பினும் ஒரு நாள் ஒரு போட்டி என இரண்டு நாட்களிலும் இருவரும்  ஒன்றாக வெற்றி பெற்றுள்ளனர்

இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவி செய்தால் ஒருவரால் முடியாததை  இன்னொருவர் உதவியால் அனைத்திலும் அனைவரும் ஒன்றாக வெற்றி பெறலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...