ஒரு காட்டில் 4 🐄🐄🐄🐄 மாடுகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த நான்கு மாடுகள் எப்பொழுதும் ஒன்றாகவே உணவு அருந்தும் , தூங்கும் இவ்வாறு ஒன்றை ஒன்று சிறிது நேரமும் பிரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது. அக்காட்டில் இதனுடன் 🦁 சிங்கமும், 🦊 நரியும் இருந்தது. சிங்கம் மாடுகளை வேட்டையாட ஒரு மாட்டின் பக்கம் வந்தது, உடனிருந்த 3 மாடுகளும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை துரத்திவிட்டு 4 மாடுகளும் முன்பு போல சந்தோஷமாக இருந்தது. இதனை கண்ட மிகுந்த பசியுள்ள நரி மாடுகள் ஒற்றுமையாக வாழ்வதால்தான் சிங்கம் மாடுகளை வேட்டையாட இயலவில்லை, 4 மாடுகளின் ஒற்றுமையை பிரிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது. 3 மாடுகள் உறங்கியதை கண்ட நரி 4ஆவது மாட்டிடம் நண்பா இந்த 3 மாடும் உனக்கு தெரியாமல் வேறொரு இடத்தில் உணவு உண்ண வேண்டும் என்று திட்டம் தீட்டியதை நான் கேட்டேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அடுத்த நாள் 4 ஆவது மாடு மற்ற 3 மாடுகளுடன் சண்டை யிட்டு பிரிந்து சென்றது. ஒற்றை மாட்டை கண்ட சிங்கம் அந்த 4ஆவது மாட்டை வேட்டையாடி தின்று சென்றது. சிங்கம் விட்டுச் சென்ற மீதமுள்ள மாட்டு இறைச்சியை நரி தின்று தனது பசியைப் போக்கியது.
நீதி- 4 ஆவது மாடு நரி பேச்சை கேட்டு 3 மாட்டுடன் சண்டையிடாமல் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்திருந்தால் 4ஆவது மாடு உயிரோடு வாழ்ந்திருக்கும். எனவே அனைவருடனும் சண்டையிடாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒற்றுமையாக நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக