முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல , யாரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.

 பாலைவனத்தில் ஒரு 🦓 வரிக்குதிரையும் , ஒரு 🐫 ஒட்டகமும் வசித்து வந்தது. வரிக்குதிரை தாம் தான் ஒட்டகத்தை விட அழகாக இருக்கின்றோம், அதனால் தாம் தான் சிறந்தவன் என்ற கர்வத்தோடு இருந்தது. ஒருநாள் ஒட்டகம் வரிக்குதிரையிடம் "நண்பா நாம் இருவரும் மண்ணில் விளையாடலாம் வா" என்று அழைத்தது. வரிக்குதிரையோ, ஒட்டகம் தம்மை போன்று அழகாக இல்லை, ஒட்டகம் தம்மோடு ஒப்பிடுகையில் தாழ்ந்தவன், தனக்கு  நண்பனாக இருக்க ஒட்டகம் தகுதியற்றவன் என்று மனத்திரையில் எண்ணிக்கொண்டது. வரிக்குதிரை, ஒட்டகத்திடம் "நான் மண்ணில் விளையாடினால் எனது உடலிலுள்ள அழகான வெள்ளை கருப்பு நிற கோடுகளில் மண் ஒட்டுவதோடு  அது என் அழகை கெடுக்கும், அழகுதான் முக்கியம் நான் விளையாட வர மாட்டேன்" என்றது. இதைக்கேட்ட ஒட்டகம் தான் மட்டும் மண்ணில் விளையாடி மகிழ்ந்தது. சிறிதுகாலம் கழித்து பாலைவனத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது, அருகிலிருந்த நீர்நிலைகள் வற்றின. வரிக்குதிரை அருந்த தண்ணீரின்றி தவித்தது. அப்போது தான் தன் அழகை மட்டும் வைத்து ஒன்றும் பயனில்லை என்று எண்ணி ஒட்டகத்திடம் "தாகமாக உள்ளது தயவுகூர்ந்து நிவீர் சேர்த்த  தண்ணீரைத் தந்து உதவு இல்லையேல் நான் இறக்க நேரிடும்" என்றது. ஒட்டகம் "என்னிடம் நான் சேமித்த தண்ணீர் உள்ளது ஆனால் அதைத் தர இயலாது, அது எனது முதுகில் உள்ளது கவலைப்படாதே தண்ணீர் இருக்கும் இடத்தை என்னால் கண்டுபிடிக்க இயலும், நான் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு உன்னை அழைத்துச் சென்று உதவுகிறேன் என்றது". ஒட்டகமும் வரிக்குதிரையும் நீர் தேடிச் செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் அதிகமுற்றதால் வரிக்குதிரையின் கால்கள் வலித்தது, வரிக்குதிரை ஒட்டகத்திடம் "வெயிலால் கால்கள் நடக்கும் களைப்பில் வலிக்கிறது கண்கள்  சோர்வடைந்துள்ளது உனக்கு கால்கள் வலிக்கவில்லையா?" என்றது. ஒட்டகம் "என் கண் இமைகள் பெரியதாக இருப்பதால் அது என் கண்களை சூரிய ஒளியில் இருந்து காக்கின்றது, மேலும் என் கால்கள் தரையின் சூட்டைத் தாங்கி எளிதாக பாலைவனத்தில் நடப்பதற்காகவே இறைவன் என் கால்களை வலிமையாக படைத்துள்ளார், நீங்கள் என் மீது ஏறுங்கள் நான் பத்திரமாக நீரிருக்குமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன்" என்றது. வரிக்குதிரை "உங்களால் என்னை சுமக்க முடியுமா?" என்று ஒட்டகத்திடம் கேட்டது. ஒட்டகம் "பாலைவனத்தில் மக்கள் என் மீது சவாரி செய்தே பயணிக்கின்றார்கள் அதனால் கவலை கொள்ளாமல் என் மீது ஏறி தாங்கள் பயணிக்கலாம்" என்று வரிக்குதிரையிடம் சொன்னது. பின்னர் வரிக்குதிரை ஒட்டகத்தின் மீது சவாரி செய்து நீர்நிலையை அடைந்து தண்ணீர் பருகியது. தண்ணீர் பருகியவுடன் வரிக்குதிரை ஒட்டகத்திடம் "முன்பு நான் தங்கள் உருவம் கொண்டு மின்னுவது மட்டும் அழகு என்று உங்களை மதிப்பிட்டது என் தவறு அதனை இப்போது உணர்ந்தேன், நீங்கள் பாலைவனத்தில் வாழத் தங்களுக்கு ஏதுவாக இறைவன் தங்களைப் படைத்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன், இப்போது அனைத்து உயிர்களையும் மதிக்கிறேன், உங்களின் நட்பைப் பெற விரும்புகின்றேன்" என்று கூறியது.ஒட்டகமும் வரிக்குதிரையின் நட்பை ஏற்றது.ஒட்டகத்தின் நட்பைப்பெற்று வரிக்குதிரை சிறந்து வாழத்தொடங்கியது.

நீதி- கண்களால் பார்ப்பதற்கு அழகானது மட்டும் அழகன்று உள்ளத்தால் அனைவருக்கும் மனமுவந்து உதவுவதே சிறந்த அழகாகும் என்பதைப் போன்று ஒட்டகம் வரிக்குதிரைக்கு உதவி செய்து உண்மையான நண்பனானது.

      இப்பூமியில் அனைத்து உயிர்களையும் தனித் தனித் திறமையோடு அவர் அவர்கள் வாழ ஏதுவாக இறைவன் படைத்துள்ளார். ஆதலால் இப்பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் சிறந்தவையே. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...