காட்டிலிருந்த வேடன் ஒருவன் 🐦🐦பறவைகளை தன் மத்திய உணவாக உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் மரத்தடியில் அரிசி பருக்கைகளை பரப்பிவிட்டு அருகிலுள்ள மரத்தினருகே பறவைகளுக்குத் தெரியாதவாறு ஒளிந்து கொண்டார். வானத்தில் பறவைகள் 🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦 கூட்டமாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் இருந்த சிறிய பறவை ஒன்று மரத்தடியில் அரிசி பருக்கைகளைக் கண்டது, உடனே அதனை ராஜா பறவையுடனும், ராணி பறவையுடனும் சொன்னது. ராஜா பறவை அனைத்து பறவைகளையும் இதுதான் உணவு உண்ண சரியான தருணம் என்று கூறி அனைத்துப் பறவைகளுடன் மரத்தை நோக்கி பறந்தது. பறவைகள் மரத்தை அடைந்தவுடன் மரத்தடியில் அமர்ந்து அரிசி பருக்கைகளை உண்ண ஆரம்பித்தது. வேடன் திட்டமிட்டபடி நடந்தது. அருகிலிருந்த வேடன் இதனை கண்டவுடன் தன் கையிலிருந்த வலையை மரத்தடியை நோக்கி வீசினார். அந்த வலை அனைத்து பறவைகளையும் சிறைப்பிடித்தது. பறவைகள், வேடன் தங்களை நோக்கி வருகிறார் என்பதை கண்டுகொண்டது. ராணி பறவை தங்களை தாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அனைத்துப் பறவைகளுடனும் தாம் ஒரே நேரத்தில் பறந்தால் தான் வலையுடன் பறந்து வேடனிடமிருந்து தப்ப முடியும் என்று கூறியது. ஒன்று , இரண்டு, மூன்று பறப்போம் என்று அனைத்து பறவைகளும் ஒன்றினைந்து ஒருசேர வலையுடன் பறந்து வேடனிடமிருந்து தங்களை காத்துக்கொண்டு பறந்தது. வழியில் தன் நண்பன் 🐀எலியைக் கண்டது, எலியிடம் பறவைகள் வலையிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொண்டது. எலி தனது 🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀 சக நண்பர்களை அழைத்து வந்து வலையைத் தன் வாயில் கடித்து ஓட்டையிட்டு அனைத்து பறவைகளையும் வலையிலிருந்து காப்பாற்றியது. பறவைகள் அனைத்தும் எலியிடம் நன்றி தெரிவித்து முன்பு போல வானில் பறக்கத்தொடங்கியது.
நீதி - இதுவே ஒரு பறவை தனியாக பறந்து வேடனின் வலையில் சிறைபட்டிருந்தால் வலையோடு பறந்து தப்பிக்க இயலாமல் வேடனுக்கு இரையாகி இருக்கும். ஒரு எலி மட்டும் வலையைக் கடித்திருந்தால் சிறிது நேரத்தில் சோர்வடைந்து பறவைகளை வலையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியாது.
பறவைகள் ஒற்றுமையாக இருப்பதால்தான் தன்னைவிட வலிய வலையோடு பறந்து வேடனிடமிருந்து தப்ப முடிந்தது.எலிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்ததால்தான் வலையில் துளையிட்டு பறவைகளை காக்க முடிந்தது.
எனவே நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை யுக்தியோடு கையாண்டு வெற்றிபெற இயலும். மேலும் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் தன்னைப் போன்ற பிற உயிரினங்களுக்கு உதவி புரிந்து அதனையும் காக்க இயலும். ஆகவே ஒற்றுமையாக இருந்து அனைவருக்கும் உதவி செய்து நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.அன்பை பகிர்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக