முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒற்றுமையே வலிமை.

காட்டிலிருந்த வேடன் ஒருவன் 🐦🐦பறவைகளை தன் மத்திய உணவாக உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் மரத்தடியில் அரிசி பருக்கைகளை பரப்பிவிட்டு அருகிலுள்ள மரத்தினருகே பறவைகளுக்குத் தெரியாதவாறு ஒளிந்து கொண்டார். வானத்தில் பறவைகள் 🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦 கூட்டமாக சிறகடித்துப் பறந்து  கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் இருந்த சிறிய பறவை ஒன்று மரத்தடியில் அரிசி பருக்கைகளைக் கண்டது, உடனே அதனை ராஜா பறவையுடனும், ராணி பறவையுடனும்  சொன்னது. ராஜா பறவை அனைத்து பறவைகளையும் இதுதான் உணவு உண்ண சரியான தருணம் என்று கூறி அனைத்துப் பறவைகளுடன் மரத்தை நோக்கி பறந்தது. பறவைகள் மரத்தை அடைந்தவுடன் மரத்தடியில் அமர்ந்து அரிசி பருக்கைகளை உண்ண ஆரம்பித்தது. வேடன் திட்டமிட்டபடி நடந்தது. அருகிலிருந்த வேடன் இதனை கண்டவுடன் தன் கையிலிருந்த வலையை மரத்தடியை நோக்கி வீசினார். அந்த வலை அனைத்து பறவைகளையும் சிறைப்பிடித்தது. பறவைகள், வேடன் தங்களை நோக்கி வருகிறார் என்பதை கண்டுகொண்டது. ராணி பறவை தங்களை தாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறி அனைத்துப் பறவைகளுடனும் தாம் ஒரே நேரத்தில் பறந்தால் தான் வலையுடன் பறந்து வேடனிடமிருந்து தப்ப முடியும் என்று கூறியது. ஒன்று , இரண்டு, மூன்று  பறப்போம் என்று அனைத்து பறவைகளும் ஒன்றினைந்து ஒருசேர வலையுடன் பறந்து வேடனிடமிருந்து தங்களை காத்துக்கொண்டு பறந்தது. வழியில் தன் நண்பன் 🐀எலியைக் கண்டது, எலியிடம் பறவைகள் வலையிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொண்டது. எலி தனது 🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀 சக நண்பர்களை அழைத்து வந்து வலையைத் தன் வாயில் கடித்து ஓட்டையிட்டு அனைத்து பறவைகளையும் வலையிலிருந்து காப்பாற்றியது. பறவைகள் அனைத்தும் எலியிடம் நன்றி தெரிவித்து முன்பு போல வானில் பறக்கத்தொடங்கியது.

நீதி -  இதுவே ஒரு பறவை தனியாக பறந்து வேடனின் வலையில் சிறைபட்டிருந்தால் வலையோடு பறந்து தப்பிக்க இயலாமல் வேடனுக்கு இரையாகி இருக்கும். ஒரு எலி மட்டும் வலையைக் கடித்திருந்தால் சிறிது நேரத்தில் சோர்வடைந்து பறவைகளை வலையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியாது.

பறவைகள் ஒற்றுமையாக இருப்பதால்தான் தன்னைவிட வலிய வலையோடு பறந்து வேடனிடமிருந்து தப்ப முடிந்தது.எலிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்ததால்தான் வலையில் துளையிட்டு பறவைகளை காக்க முடிந்தது. 

எனவே நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை யுக்தியோடு கையாண்டு வெற்றிபெற இயலும். மேலும் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் தன்னைப் போன்ற பிற உயிரினங்களுக்கு உதவி புரிந்து அதனையும் காக்க இயலும். ஆகவே ஒற்றுமையாக இருந்து அனைவருக்கும் உதவி செய்து நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.அன்பை பகிர்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...