கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜 எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗 வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கால முன்பே கட்டி முடித்தது.கோடைகாலம் முடிவுற்று மழை பெய்தது, குளிர்காலம் தொடங்கியது.எறும்புகள் தாங்கள் கட்டிய புற்றில் வசித்து,சேர்த்த உணவை உண்டு மகிழ்ந்தது.வெளியில் வெட்டுக்கிளி மழையில் நனைந்து, பசியால் துடித்தது. வெட்டுக்கிளி, எறும்பு புற்றின் முன் நின்று எறும்புகளிடம் உதவியைக் கேட்டது,உதவாவிடில் நான் இறக்க நேரிடும் என்று கூறியது. இதனைக் கேட்டவுடன் எறும்புகள் வெட்டுக்கிளியை புற்றினுள் அழைத்து உணவு கொடுத்து உதவி இன்புற்றது.
நீதி- எறும்புகள் "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ","பருவத்தே பயிர் செய்"என்பதனைப் போன்று கோடைக்காலத்திலேயே புற்று கட்டி உணவு சேகரித்ததால்தான் குளிர்காலத்தில் வெளியில் சென்று உணவு சேகரிக்க இயலாவிடினும் சேர்த்த உணவை உண்டு மகிழ முடிந்தது.
எறும்புகள் "வருமுன் காப்பதே சிறந்தது" என்பது போன்று எதிர்காலத்தை பற்றி யோசித்து புற்று கட்டி உணவு சேகரித்து வரும் மழைகாலத் துன்பத்திலிருந்து முன்பே தன்னை காத்துக் கொண்டது.
மேலும் எறும்புகள்
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
என்பதிற்கேற்ப கோடைக்காலத்தில் வெட்டுக்கிளி இகழ்ந்ததை பொறுத்துக் கொண்டு அதனை பெரிதுபடுத்தாமல் தன் உணவு சேகரித்தல் வேலையை செவ்வனே செய்தது.
"காலத்தினால்செய்த நன்றி
சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."
என்பதைப் போன்று உரிய நேரத்தில் வெட்டுக்கிளிக்கு எறும்புகள் உதவி செய்தது.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்" என்றவாறு சிறிய எறும்பு தான் உணவு எடுத்துச்செல்ல உதவ மறுத்து இகழ்ந்த வெட்டுக்கிளிக்கும் பெருந்தன்மையாய் உணவு அளித்து உதவி செய்தது.
எனவே நாம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பைத் தொடங்குவோம்,அதுவே நம்மை வரும் பேரிடரிலிருந்து நம்மைக் காக்க இயலும்.அதுமட்டுமின்றி தம்மை இகழ்ந்தவரையும் உற்ற நேரத்தில் உதவி செய்யாதவரையும் பாரபட்சமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் நம் சேமிப்பைக் கொண்டு உதவ முடியும். எப்பொழுதும் அனைத்து உயிர்களுக்கும் பெருந்தன்மையாய் உதவி மகிழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக