👧கலாவும், 🧕கமலாவும் சிறுவயதிலிருந்தே தோழிகள். 👧கலா பத்தாவது வரையில் படித்திருக்கின்றாள், 🧕கமலா 👩🎓 முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாள். 🧕கமலாவுக்கு வெளியூரில் 🏫அரசாங்கப் பள்ளியில் 👩🏫ஆசிரியர் பணி கிடைத்தது.👧கலா தையல் பயிற்சி பெற்று தையல் கடைக்கு வேலைக்குச் செல்கிறாள். 🧕கமலாவின் சம்பளம் மாதம் 30,000. 👧கலாவின் சம்பளம் மாதம் 15000, வீட்டு வாடகை அத்தியாவசிய தேவைகள் போக மீதமுள்ள 3000 ரூபாயை சேமிப்பாள்.அதை வங்கியில் சேமிக்க தெரியாது 🧕கமலாவின் உதவியோடு மாதம் 3000 வங்கியில் செலுத்தி சேமித்தாள்.🧕 கமலா அத்தியாவசிய தேவை போக 13000 ரூபாயை வங்கியில் சேமிப்பாள். 👧கலாவால் வருடத்திற்கு 36000 மட்டுமே சேமிக்க முடிந்தது.🧕கமலாவால் வருடத்திற்கு 1,56000 சேமிக்க முடிந்தது.10 வருடம் கழித்து தனது சேமிப்பைக் கொண்டு 🧕கமலா சொந்த 🏠வீடு கட்டினாள் , 👧கலா தனது சேமிப்பைக் கொண்டு சிறிய தையல் கடை ஆரம்பித்தாள்.👧கலாவுக்கு சொந்த வீடு கனவாகவே இருந்தது. 👧கலா 20 வருடம் கழித்து தொழில் வருமானம் உயர்ந்து, 15 தையல் கடை சொந்த ஊரில் நிறுவி கமலாவிடம் இணைய தளத்தைப் பற்றி கேட்டறிந்து துணிகளை உலகெங்கும் விற்க இணையதளத்தை உருவாக்கினாள். உலகெங்கும் உள்ள மக்கள் துணிகளை முன்பதிவு செய்து இணைய வழியிலேயே பணம் செலுத்தினர், 👧கலா தபால் மூலம் துணிகளை முன்பதிவு செய்தவர் முகவரிக்கு அனுப்ப இவ்வாறு கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதி பணத்தை சேமித்து வைத்து 🏡வீடு கட்டினாள்.
நீதி:
"கல்லாதவர் கண்ணில்லாதவர்" என்றனர் நம் முன்னோர். அதாவது நமக்கு படிக்கத் தெரியவில்லை என்றால் கண் கொண்டு சொற்களைப் பார்த்துப் பயனில்லை ஏனென்றால் சொற்களின் கருத்தை பெற்று பின்பற்ற முடியாது.பேருந்தில் பயணம் செய்ய பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் சொற்களைப் படித்து தான் பேருந்து எங்கே செல்கிறது என்பதை யார் உதவியும் இல்லாமல் எளிதில் நாமாக அறிய முடியும். படிக்கத் தெரியவில்லை என்றால் பிறரிடமோ, இல்லை நடத்துனரிடமோ கேட்டறிய வேண்டும்.
இக்கதையில் இருவராலும் வீடு கட்ட முடிந்தது. கமலா உயர் கல்வி பெற்றதால், மதிப்புமிக்க ஆசிரியர் பணி வெளியூரில் கிடைத்தது. "கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதிற்கேற்ப கமலாவுக்கு வெளியூரிலும் வருமானத்துடன் மதிப்பு கிடைத்தது. கமலாவால் 10 வருடத்திலேயே சொந்த வீடு கட்ட முடிந்தது, கலா சொந்த வீடு கட்ட 20 வருடங்கள் காலதாமதமானது.
இக்கால நவீன வாழ்வில் வங்கியில் பணம் செலுத்த, இணைய வழியில் பணப்பரிமாற்றம் செய்ய, இணைய வழியில் நமக்குத் தேவையான பொருட்களை வாங்க விற்க , பயணம் செய்ய பேருந்து, ரயில், வானூர்தி முன் பதிவு இணையவழியில் செய்ய, கட்டணம் செலுத்த, உலகமெங்கும் தொழிலில் வளர்ச்சி பெற தொழிலுக்கான வலைதளத்தை இயக்க போன்ற அடிப்படை வாழ்வாதார செயல்களை பிறர் உதவியின்றி எளிதில் செய்ய கல்வி மிகப்பெரும் பங்காற்றுகிறது, கல்வி கற்கவில்லை என்றால் நம்பிக்கைக்குரியவரிடம் கேட்டு கற்று அதன்பின் செயல்படவேண்டியிருக்கும் சற்று காலதாமதம் ஆகும். "காலத்தே பயிர் செய்ய வேண்டும் ", "காலமும் நேரமும் போனால் திரும்ப வராது", "காலத்தை சரியாகப் பயன்படுத்தி வேண்டும்" போன்ற தொன்மையான பொன்மொழி அறிந்த நாம் காலத்தையும், நேரத்தையும் சரியாக பயன்படுத்த கல்வியறிவு தேவை. "கற்கையில் கல்வி கசப்பு, கற்ற பின் அதுவே இனிப்பு"கல்வி கற்பது கடினமாக இருப்பினும் கற்க வேண்டும் அப்போதுதான் வாழ்வில் அத்தியாவசிய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும் அதாவது சுலபமாக உலகில் எங்கும் வேலை கிடைக்கும், தொழில்முனைவோரும் ஆக முடியும். கல்வி தான் அழியாச் செல்வம் என்று உணர்ந்த திருவள்ளுவர்
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.
என்று திருக்குறளில் கூறியுள்ளார்.
"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு","திரைகடல் ஓடியும் திரவியம் தேடு " என்பதிற்கேற்ப இந்தியாவில் சாதாரண ஏழ்மை எளிய குடும்பத்தில் பிறந்து இன்று கூகுளின் CEO அவர்கள், CEO பதவியை அடைவதற்குக் காரணம் அவர் கற்ற கல்விதான். அம்பேத்கர் அவர்கள் சட்டம் இயற்ற அவருக்கு பெரிதும் உதவியது அவரின் கல்விதான்.அவரைப் போன்று பலர் வாழ்வில் உயர்பதவியை அடைய கல்விதான் மூலதனமாகும். ஆகவே எல்லோரும் கல்வி கற்போம் கற்பிப்போம்.
கல்வியானது நற்பண்புகளையும், தொழிற்கல்வி முதல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுத்தருகிறது, மேலும் தன் கற்ற கல்வி ஒருவரை சிந்திக்கச் செய்கிறது, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உதவுகிறது. பெரிதும் உபயோகமான புதிய கண்டுபிடிப்புகள் தான் நம்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறது.ஆகவே நாம் கல்வி கற்று நம்மை உயர்த்தி நம்மால் முடிந்தவருக்கு வேலை கொடுக்குமளவிற்கு நாம் உயர்நிலையை அடைய வேண்டும், வரும் வருமானத்தில் பெரும்பகுதியை ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், மருத்துவ உதவியை எதிர்பார்பவர்கள் மற்றும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், கஷ்டப்படுபவர்களுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம் தந்து நாமும் வாழ்ந்து அனைவரையும் வாழவைத்து அனைவருக்கும் கல்வி கற்க பொருளுதவி, பணஉதவி அளித்து கல்வியினால் அனைவரும் உயர் நிலையடைய உதவி செய்து அதிக தொழில்முனைவோருள்ள நாடாக நம் நாட்டை உயர்த்தி பொருளாதாரத்தில் பிற நாடுகளுக்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்ந்து உதவி செய்து அனைத்து நாட்டு மக்களையும் தன் நாட்டு மக்கள் போன்று எண்ணி நட்பு பாராட்டி உலகம் நமது என்று பிற உயிரினங்கள் - விலங்குகள், பறவைகளுக்கு உணவு கொடுத்து, மரங்களை அதிக அளவில் வளர்த்து பயன்பெற்று சுத்தமான காற்றினை சுவாசித்து, உலகை தூய்மையாக வைத்து மனநிம்மதியோடு நோயின்றி வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக