ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ராஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார். பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும் ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும் ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் 🏇தன் பயணத்தை மேற்கொண்டார்.
நீதி: "எண்ணம் போல் வாழ்க்கை"
என்பதுபோல் ராஜா உணவு வேண்டும் என்று நல்லதாக நேர்மறையாக நினைத்ததால் இந்த பிரபஞ்சம் (உலகம்/கடவுள்) பழத்தை தந்து உதவியது. மேலும் முயற்சித்து பழங்களைப் பறித்து தன் பசியைப் போக்கினார். பின்பு அவர் பூதத்தைப் பற்றி எண்ணி எதிர்மறை எண்ணம் கொண்டதால் காய்ச்சல் வந்தது. ராஜா எதிர்மறை எண்ணம் கொள்ளாமல் கடவுள் தான் தனக்காக ஆப்பிளை கீழே விழச் செய்தார் என்று நேர்மறையாக எண்ணியது போல் கடவுள் நம்மோடு என்றும் இருப்பார், பூதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வந்தாலும் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று நேர்மறையாக எண்ணியிருந்தால் காய்ச்சல் வந்திருக்காது அன்று இரவு நன்றாக உறங்கி இருப்பார். இதனைத் திருக்குறள்
"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து". என்று கூறுகிறது. இதன் அர்த்தம் எப்பொழுதும் நேர்மறை எண்ணம் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
"கெட்டதை நினைத்தால் கெட்டதுதான் நடக்கும், நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்"
எனவே நாம் நமக்கு தேவையானவற்றை மற்றவருக்கு பாதிக்காத வகையில் நேர்மறை எண்ணம் கொண்டால் இந்த உலகம் நமக்கு நல்லதொரு வழியை காண்பிக்கும் மேலும் நாம் முயற்சித்து அதனைப் பின்பற்றி நம் தேவையை பூர்த்தி செய்து வாழ்வில் முன்னேறுவோம்.
எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து நாமும் பயன்பெற்று நம்மால் இயன்றளவு மற்றவருக்கும் உதவி செய்து இன்பமாய் வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக