சுய பரிசோதனை செய்,தன்னை அறிந்தவனே தலைவனாவான், தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையோடு வாழ், பிடித்த தொழிலை தேர்ந்தெடு
பெரிய எலி🐀ஒன்று சிறியதாக இருப்பதால் மனம் வருந்தி நம் இனத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி இந்த 🌍 உலகில் வாழ யார் பலசாலியோ அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வாழ்வில் பலசாலியாக வேண்டும் என்று நினைத்து, ஒரு நாள் 🌍உலகைப் படைத்த பிரம்மதேவரிடம் சென்று "பிரம்மதேவா இந்த 🌍உலகைப் படைத்தவன் நீங்கள் தான் ஆகவே கூறுங்கள் உலகில் பெரிய பலசாலி யார்? "அதற்கு பிரம்மதேவர், "என்னைப் பொறுத்தவரை இந்த🌍 உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஒளி கொடுத்து உயிர் வாழ உதவுகின்ற ☀️சூரியனே பலசாலி" என்றார். உடனே🐀 எலி ,சூரியனிடம் சென்று "☀️சூரியனே இந்த 🌍உலகில் நீங்கள் தான் பலசாலி ",என்று பிரம்மதேவர் கூறியுள்ளார் என்றது. ☀️சூரியன் ,🐀எலியிடம் "நான் ஒன்றும் பலசாலி அல்ல ஒரு சில நேரங்களில் என் அனல் ஒளியை மறைக்கும் மேகம் ☁️ தான் பலசாலி என்றார்". 🐀எலி ☁️மேகத்திடம் சென்று," நீங்கள் தான் 🌍உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று சூரியன் ☀️ கூறியுள்ளார் " என்றது. ☁️ மேகம், ☀️சூரியனிடம் "நான் எங்கு ⛈️மழை பொழிய வேண்டும் என்று முடிவு செய்வதே 💨காற்று தான் ஆகவே 💨காற்றுதான் பலசாலியே தவிர நானல்ல" என்றவுடன் 🐀எலி 💨,காற்றிடம் சென்று "நீங்கள் தான்🌍 உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று ☁️மேகமான வருணபகவான் கூறியுள்ளார்" என்றது. அதற்கு, 💨காற்று "நான் பலசாலி அல்ல என்னைத் தடுக்கும் ,🏛️சுவர் தான் பலசாலி " என்றார். 🐀எலி , 🏛️சுவரிடம் சென்று "நீங்கள் தான் 🌍உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று 💨காற்று கூறியது " என்றார். 🏛️சுவர் ,🐀எலியிடம் "என்னை விட பலசாலி நீ தான் எலி🐀, சிறியதாக இருந்தாலும் 🏛️சுவர் அடியில் மண்ணைக் கொடைந்து 🏛️சுவரான என்னையே கீழே தள்ளிவிடும் வல்லமை உமக்கு உள்ளது என்னைப் பொறுத்தவரை, 🐀எலியே நீ தான் பலசாலி" என்றது. இறுதியில் 🐀எலி," நான் என் அருமை தெரியாமல் மற்றவரைப் பற்றி எண்ணி யார் பலசாலி என்று கண்டுபிடிக்க எனது பாதி வாழ்நாளை வீணாக செலவிட்டேன், முன்பே என்னைப் பற்றி எண்ணியிருந்தால் மற்றவரிடத்தில் சென்று காலத்தை விரயம் செய்யாமல் நான் என் திறமையை வைத்து எனக்கு பயனுள்ளதை வாழ்வில் பெற்று மனநிறைவாக வாழ்ந்திருப்பேன்" என்று நினைத்துக் கொண்டு மற்ற 🐁🐭🐭🐁🐭🐀🐁🐭🐁எலிகளிடம் நடந்த நிகழ்வினை எடுத்துக் கூறி "நான் என் வாழ்நாளை மற்றவர்களை உயர்வாக எண்ணி என்னைத் தாழ்த்தி நினைத்து மற்றவர்களிடம் சென்று என் நேரத்தையும் காலத்தையும் வீணாக செலவிட்டேன், எனவே நாம் நம் திறமையை அறிந்து அதனை வளர்த்து அதன் மூலம் அறிவையும் பொருளையும் ஈட்டி வாழ்வை செம்மையாக வாழ்வோம்" என்று மற்ற 🐁🐭🐭🐁🐭🐀🐁எலிகளுக்கு அறிவுரை கூறியது.மற்ற 🐁🐭🐭🐁🐭🐀🐁எலிகளும் " சரி 🐀எலியே! அனைவரும் நீ கூறியதை ஏற்போம் தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்து வாழ்வில் அனைத்தையும் பெற்று இன்பமாய் வாழ்வோம்" என்று கூறி அதன்படி நடந்து இன்பமாய் வாழ ஆரம்பித்தது.
நீதி: " சுய பரிசோதனை செய், தன்னை அறிந்தவனே தலைவனாவான், தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையோடு வாழ், பிடித்த தொழிலை தேர்ந்தெடு".
என்றவாறு எலி இறுதியில் தன்னை அறிந்து நாமே ஒரு தலைவன் என்று நினைத்து எதிர்கால பயத்தைப் போக்கி தன்னம்பிக்கையோடு தன் கூட்டத்துடன் வாழ ஆரம்பித்தது, இல்லையெனில் தாழ்வுமனப்பான்மையுடன் இருந்திருந்தால் பலசாலியிடம் பணி புரிய வேண்டும் என்று எண்ணி, எலி தனக்குப் பிடிக்காத வேலையை செய்து தன் சந்தோஷத்தை இழந்து மற்றவருக்கு அடிமையாய் நரக வாழ்வை வாழ நேர்ந்திருக்கும்.
கடவுள் ஒவ்வொருவரையும் தனித்தன்மையோடு படைத்துள்ளார், நாம் நம் திறமையை அறியாமல் மற்றவர்களின் மேன்மையை அறிந்து அவர்களிடம் பணிபுரிந்தால் நம் தனித்தன்மை இழந்துவிடும்.
"நாம் நம் திறமையை வளர்க்க காலத்தை செலவிடவில்லையென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் நம் சந்தோஷத்தைத் தொலைத்து மற்றவர்களுக்காக அடிமை வேலை செய்ய நேரிடும்".
ஆகவே ஆட்டு மந்தை போல் அனைவரைப்போன்று ஏதாவதொரு வேலை தேர்ந்தெடுத்து செய்தால் விருப்பமில்லாமல் செய்யும் செயலில் நாம் எந்த ஒரு சாதனையும் செய்ய இயலாது.
நம் திறமையையும் நமக்கு பிடித்ததையும் அறிந்து அதனை வளர்த்து இன்பமாய் வேலை செய்யும்போது வேலையில் உள்ள கடினத்தன்மையை கூட சவாலாக நினைத்து முயற்சித்து சுலபமாகவும் இன்பமாகவும் செய்ய முடியும்.
எனவே நமக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து வேலை செய்து இன்பமாய் வாழ்ந்து புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சரித்திரம் படைத்து வரலாற்றில் இடம்பெற்று வருங்காலத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டாய்த் திகழ்ந்து ஊக்கம் அளிப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக