முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுய பரிசோதனை செய்,தன்னை அறிந்தவனே தலைவனாவான், தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையோடு வாழ், பிடித்த தொழிலை தேர்ந்தெடு

 பெரிய எலி🐀ஒன்று சிறியதாக இருப்பதால் மனம் வருந்தி நம் இனத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி இந்த 🌍 உலகில்  வாழ யார் பலசாலியோ அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வாழ்வில் பலசாலியாக வேண்டும் என்று நினைத்து, ஒரு நாள் 🌍உலகைப் படைத்த பிரம்மதேவரிடம் சென்று "பிரம்மதேவா இந்த 🌍உலகைப் படைத்தவன் நீங்கள் தான் ஆகவே கூறுங்கள் உலகில் பெரிய பலசாலி யார்? "அதற்கு பிரம்மதேவர், "என்னைப் பொறுத்தவரை இந்த🌍 உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஒளி கொடுத்து உயிர் வாழ உதவுகின்ற ☀️சூரியனே பலசாலி" என்றார். உடனே🐀 எலி ,சூரியனிடம் சென்று "☀️சூரியனே இந்த 🌍உலகில் நீங்கள் தான் பலசாலி ",என்று பிரம்மதேவர் கூறியுள்ளார் என்றது. ☀️சூரியன் ,🐀எலியிடம் "நான் ஒன்றும் பலசாலி அல்ல ஒரு சில நேரங்களில் என் அனல் ஒளியை மறைக்கும் மேகம் ☁️ தான் பலசாலி என்றார்". 🐀எலி ☁️மேகத்திடம் சென்று,"  நீங்கள் தான் 🌍உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று சூரியன் ☀️ கூறியுள்ளார் " என்றது. ☁️ மேகம், ☀️சூரியனிடம் "நான் எங்கு ⛈️மழை பொழிய வேண்டும் என்று முடிவு செய்வதே 💨காற்று தான் ஆகவே 💨காற்றுதான் பலசாலியே தவிர நானல்ல" என்றவுடன் 🐀எலி 💨,காற்றிடம் சென்று "நீங்கள் தான்🌍 உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று ☁️மேகமான வருணபகவான் கூறியுள்ளார்" என்றது. அதற்கு, 💨காற்று "நான் பலசாலி அல்ல என்னைத் தடுக்கும் ,🏛️சுவர் தான் பலசாலி " என்றார். 🐀எலி , 🏛️சுவரிடம் சென்று "நீங்கள் தான் 🌍உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று 💨காற்று கூறியது " என்றார். 🏛️சுவர் ,🐀எலியிடம் "என்னை விட பலசாலி நீ தான் எலி🐀, சிறியதாக இருந்தாலும் 🏛️சுவர் அடியில் மண்ணைக் கொடைந்து 🏛️சுவரான என்னையே கீழே தள்ளிவிடும் வல்லமை உமக்கு உள்ளது என்னைப் பொறுத்தவரை, 🐀எலியே நீ தான் பலசாலி" என்றது. இறுதியில் 🐀எலி," நான் என் அருமை தெரியாமல் மற்றவரைப் பற்றி எண்ணி யார் பலசாலி என்று கண்டுபிடிக்க எனது பாதி வாழ்நாளை வீணாக செலவிட்டேன், முன்பே என்னைப் பற்றி எண்ணியிருந்தால் மற்றவரிடத்தில் சென்று காலத்தை விரயம் செய்யாமல் நான் என் திறமையை வைத்து எனக்கு பயனுள்ளதை வாழ்வில்  பெற்று மனநிறைவாக வாழ்ந்திருப்பேன்"  என்று நினைத்துக் கொண்டு மற்ற 🐁🐭🐭🐁🐭🐀🐁🐭🐁எலிகளிடம் நடந்த நிகழ்வினை எடுத்துக் கூறி "நான் என் வாழ்நாளை மற்றவர்களை உயர்வாக எண்ணி என்னைத் தாழ்த்தி நினைத்து மற்றவர்களிடம் சென்று என் நேரத்தையும் காலத்தையும் வீணாக செலவிட்டேன்,  எனவே நாம் நம் திறமையை அறிந்து அதனை வளர்த்து அதன் மூலம் அறிவையும் பொருளையும்  ஈட்டி வாழ்வை செம்மையாக வாழ்வோம்" என்று மற்ற 🐁🐭🐭🐁🐭🐀🐁எலிகளுக்கு அறிவுரை கூறியது.மற்ற 🐁🐭🐭🐁🐭🐀🐁எலிகளும் " சரி 🐀எலியே! அனைவரும் நீ கூறியதை ஏற்போம் தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்து வாழ்வில் அனைத்தையும் பெற்று இன்பமாய் வாழ்வோம்" என்று கூறி அதன்படி நடந்து இன்பமாய் வாழ ஆரம்பித்தது.

நீதி:   " சுய பரிசோதனை செய், தன்னை அறிந்தவனே தலைவனாவான், தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையோடு வாழ், பிடித்த தொழிலை தேர்ந்தெடு". 

என்றவாறு  எலி இறுதியில் தன்னை அறிந்து நாமே ஒரு தலைவன் என்று நினைத்து எதிர்கால பயத்தைப் போக்கி தன்னம்பிக்கையோடு தன் கூட்டத்துடன் வாழ ஆரம்பித்தது, இல்லையெனில் தாழ்வுமனப்பான்மையுடன் இருந்திருந்தால் பலசாலியிடம் பணி புரிய வேண்டும் என்று எண்ணி, எலி தனக்குப் பிடிக்காத வேலையை செய்து தன் சந்தோஷத்தை இழந்து மற்றவருக்கு அடிமையாய்  நரக வாழ்வை வாழ நேர்ந்திருக்கும்.

        கடவுள் ஒவ்வொருவரையும் தனித்தன்மையோடு படைத்துள்ளார், நாம் நம் திறமையை அறியாமல் மற்றவர்களின் மேன்மையை அறிந்து அவர்களிடம் பணிபுரிந்தால் நம் தனித்தன்மை இழந்துவிடும்.

 "நாம் நம் திறமையை வளர்க்க காலத்தை செலவிடவில்லையென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் நம் சந்தோஷத்தைத் தொலைத்து மற்றவர்களுக்காக அடிமை வேலை செய்ய நேரிடும்". 

ஆகவே ஆட்டு மந்தை போல் அனைவரைப்போன்று ஏதாவதொரு வேலை தேர்ந்தெடுத்து செய்தால் விருப்பமில்லாமல் செய்யும் செயலில் நாம் எந்த ஒரு சாதனையும் செய்ய இயலாது. 

நம் திறமையையும் நமக்கு பிடித்ததையும்  அறிந்து அதனை வளர்த்து இன்பமாய் வேலை செய்யும்போது  வேலையில் உள்ள கடினத்தன்மையை  கூட சவாலாக நினைத்து முயற்சித்து சுலபமாகவும் இன்பமாகவும்  செய்ய முடியும்.

 எனவே நமக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து வேலை செய்து இன்பமாய் வாழ்ந்து புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சரித்திரம் படைத்து வரலாற்றில் இடம்பெற்று வருங்காலத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டாய்த் திகழ்ந்து ஊக்கம் அளிப்போம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...