🏘️கிராமத்தில் மூன்று 👱👱♂️👦திருடர்கள் அனைவரின் 🏠🏡🏛️🏚️🏘️வீட்டிலுள்ள ஆடுகளில் தினம் ஒரு ஆடு 🐐🐏🐑என்ற கணக்கில் திருடி அதனை விற்று பணத்தை பெருக்கி வந்தனர். ஒருநாள் மூன்று திருடர்களின் ஒருவன்👦 "எனக்கு பக்கத்து ஊரில் வேலை கிடைத்தது, இனி நான் திருட மாட்டேன், திருடுவது தவறு என்று என் தாய் 👩கூறியபின் உணர்ந்தேன். இது 🌃 இரவு நேரம் என்பதால் நான் எந்த வீட்டில் ஆடுகளை திருடி அதனை விற்று பணத்தை பெற்றேனோ அந்த வீட்டில் இருப்பவரிடம் பணத்தை நாளை காலையில் கொடுக்க இருக்கிறேன்.நீங்கள் இருவரும் வேறு வேலைக்குச் செல்லுங்கள், நான் செல்கிறேன்" என்று கூறிவிட்டு வீடு திரும்பினார்.இதனை கேட்ட இருவரும் திருந்தாமல் எப்பொழுதும் நம் மூவரும் ஒன்றாக சேர்ந்து தானே திருடுவோம், நாம் இருவர் மட்டும் எவ்வாறு திருடுவது என்று புலம்பிய சமயம் இதனை கேட்ட பிச்சை எடுக்கும் 🧒ஆண்டி "ஒருவர் நான் உங்களுடன் சேர்ந்து திருட வரலாமா? என்றார்.👱♂️ "சரி" என்று ஒரு திருடன் கூற மற்றொரு திருடன்👱 ஆண்டியிடம் "உங்கள் கையில் இருக்கும் 🐚சங்கை கீழே போட்டு விட்டு எங்களுடன் வாருங்கள்" என்றான். 🧒அதற்கு ஆண்டியோ "🐚சங்கு என் கையில் இருந்தால்தான் என்னால் நடக்க முடியும்" என்று கூறினார். அதன்பின் மூவரும் அருகிலுள்ள 🏡வீட்டின் ஆடுகள் இருக்கும் ஆட்டு மந்தையில்🐐🐑🐑🐏🐐🐐🐐🐐🐐🐑 தனியாக மூன்று🐐🐐🐐 ஆட்டுகுட்டிகள் மற்ற ஆடுகளுடன் சேராமல் படுத்திருப்பதை கண்டு ஒரு திருடன்👱♂️ "நாம் மூவரும் மூன்று ஆட்டுக்குட்டியை திருடுவோம் " என்று கூறினான். மூவரும் ஆட்டு மந்தையை அடைந்து மூன்று ஆட்டுக்குட்டியை தூங்க முயன்றனர். 👱♂️👱இரண்டு திருடனும் ஆட்டின்🐐 கழுத்தை(சங்கு போன்ற பகுதி) பிடித்து 🐐🐐ஆட்டுக்குட்டிகள் கத்தாதவாறு தூக்கிக் கொண்டனர். ஆனால் 🧒ஆண்டியோ 🐐ஆட்டின் கழுத்தின் சங்கை பிடிக்காமல் ஆட்டுக்குட்டியை தூக்கியதால் 🐐ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. அப்போது இரு 👱👱♂️திருடர்களும் 🧒ஆண்டியிடம் சங்கை பிடி, சங்கை அழுத்திப்பிடி என்றனர். இதைக் கேட்ட 🧒ஆண்டி 👱👱♂️திருடர்கள் 🐐ஆட்டின் சங்கை பிடிக்க கூறுகிறார்கள் என்பதை அறியாது தன் கையிலுள்ள 🐚சங்கை ஊதினான். 🐚சங்கு சத்தம் கேட்டவுடன் 🏡வீட்டில் 👴👨👧இருப்பவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து இரு திருடர்களையும் 👱♂️👱🧒ஆண்டியையும் பிடித்து அடித்து 👮காவல்துறை அதிகாரிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு 👮காவல்துறையினரிடம் இரு திருடர்கள், ஆண்டி 👱👱♂️🧒பற்றிய விவரம் கூறினர். உடனே 👮காவல்துறை அதிகாரிகள்🚔 அவ்விடத்திற்கு வந்து இரு👱👱♂️ திருடர்களையும் 🧒ஆண்டியையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.மறுநாள் 🌅காலையில் தான் கூறிய படியே முதல் திருடன்👦 காவல்நிலையத்தில் சரணடைந்து திருட்டால் கிடைத்த பணத்தை 👮காவல்துறையினரிடம் ஒப்படைத்து குறைந்த பட்ச தண்டனை பெற்றான்.
நீதி: "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பது போல வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மக்களை ஆண்டியே சங்கை ஊதி எழுப்பி மாட்டிக்கொண்டது மட்டுமின்றி இரு திருடர்களையும் மாட்டிவிட்டு அடி உதை வாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். இதனை திருவள்ளுவர் திருக்குறளில்
"தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்"
என்றார். அதாவது முயற்சி (அனுபவம்) இல்லாத ஒருவனிடத்து வேலையை கொடுத்தால் , கோழையாக இருப்பவரை போருக்கு செல்ல வாள்கொடுப்பது போன்று கோழை போரில் தோற்று நாட்டையும் தோற்கடிக்கும் பயனற்ற செயலாகும். இக்கதையில் அனுபவம் இல்லாத ஆண்டியை திருட அழைத்தது கோழைக்கு வாள் கொடுத்த கதை ஆகிற்று. எந்த வேலையை புதிதாக செய்ய நினைத்தாலும் அந்த வேலையை செவ்வனே ( சிறந்த வகையில்) செய்ய அதற்கான முயற்சியும் பயிற்சியும் வேண்டும். இல்லையெனில் அந்த வேலையை சிறப்பாக செய்ய இயலாது. எனவே புதிய வேலையை செய்யும் முன் அதற்கான முயற்சி செய்து பயிற்சி பெற்று அனுபவம் கொண்டு சிறப்பாக செய்வோம்.
"உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கனும்" என்பது போல் தவறு செய்தால் என்றாவது ஒருநாள் அதற்கான தண்டனையை பெறுவோம். ஆகவே நாம் தவறு செய்யாமல் இருப்போம், தெரியாமல் தவறிழைத்தால் அதற்கு மன்னிப்பு வேண்டி தவறை திருத்த முயன்று மறுபடி தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக