ஒருநாள்👴 பெரியவர் ஒருவர் 🏘️கிராமத்திற்கு வந்து குப்பை கூளங்களுக்கு பேரிச்சம்பழம் என்று கூவிக் கொண்டிருப்பதைக் கேட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்து 🧒ஒருவர், பெரியவரிடம் "என்ன பெரியவரே! பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று கூறுவதற்கு பதில் தவறுதலாக குப்பை கூளங்களுக்கு பேரிச்சம்பழம் என்று கூவிக்கொண்டிருக்கின்றீர்கள் " என்றார். அதற்கு அந்த 👴பெரியவர் "நான் தவறுதலாக எதையும் கூறவில்லை உண்மையாகவே குப்பை கூளங்கள் எடைக்கு சமமாக பேரிச்சம்பழம் இலவசமாக தருகிறேன், தெருவில் இருக்கும் குப்பைகளை கொண்டு வரக்கூடாது."என்றார். இதனைக் கேட்ட மக்கள் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு பேரிச்சம்பழம் பெற்று செல்லத் தொடங்கினர். ஒரு கன்னிப்பெண் தன் வீட்டில் உள்ள 1/2 கிலோ குப்பையை கொண்டுவந்து கொடுத்துவிட்டு 1/2 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றாள். மற்றொரு 🧒ஆண் தங்கள் வீட்டிலுள்ள 1 கிலோ குப்பைகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு 1 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றார். இவ்வாறு அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு ஏற்ப பேரிச்சம்பழம் பெற்று சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு 👧கன்னிப்பெண் மட்டும் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருப்பதை பார்த்த அந்த 👴பெரியவர் அந்த பெண்ணை அழைத்து உங்கள் 🏡வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு பேரிச்சம்பழம் பெற்று செல் என்றார். அதற்கு அந்தப் 👧பெண் எங்கள் 🏡வீட்டில் குப்பைகள் எதுவும் இல்லை என்றாள்.எது உன் வீடு? என்றார் 👴பெரியவர். இதோ 👧இந்த 2🏡ஆம் நம்பர் வீடுதான் என் வீடு என்றாள் அந்தப் பெண். 👴பெரியவர் அந்த பெண்ணைப் பார்த்து அனைவரும் பேரிச்சம்பழம் பெற்று செல்வதைப் பார்த்தும் தனக்கு பேரிச்சம்பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை இல்லையா? என்றார். எனக்கு அப்படி ஒன்றும் ஆசை இல்லை பேரிச்சம்பழம் வேண்டுமென்றால் காசு கொடுத்து கடையில் வாங்கி சாப்பிடுவேன். மற்றவர் உழைப்பில் வாழ்வது தவறு என்று கூறி விட்டு 🏡 வீட்டிற்குள் சென்றாள் அப்பெண். அந்தப் பெரியவர் பெற்ற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் 🚮போட்டுவிட்டு வீடு திரும்பினார். இதனைப் பார்த்த மக்கள் அப்பெரியவர் பேரிச்சம்பழத்தை விலைக்கு விற்காமல் குப்பைக்கு மாற்றாக கொடுத்துவிட்டு மேலும் அந்த குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். இதனால் அப்பெரியவர் ஈட்டிய லாபம் என்ன? மிகவும் ஏமாளியாக உள்ளார் அந்தப் பெரியவர் என்று கேலி செய்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து 👨⚖️ ஒருவர் கிராமத்திற்கு வந்து அனைத்து மக்களையும் அழைத்து நான் இன்று முதல் உங்கள் கலெக்டர், நம் கிராமம் தூய்மையாக இருக்க வேண்டுமென்றால் முதலில் நம் வீடு தூய்மையாக இருக்க வேண்டும், இரண்டு நாட்கள் முன்பு பெரியவர் போல் வேடமிட்டு வந்து இங்குள்ள வீட்டில் எந்த வீடு தூய்மையாக உள்ளது என்பதை அறிந்தேன்.இங்குள்ள வீடுகளில் தூய்மையான வீடு 2 🏡ஆம் நம்பர் வீடு என்று கூறி 2 🏡ஆம் நம்பர் வீட்டிலுள்ள பெண்ணிற்கு இளம் தலைமுறையின் சிறந்த பெண் தூய்மையானவர் விருதை அளித்து அங்கு உள்ள அனைத்து மக்களைப் பார்த்து வீட்டையும் நாட்டையும் தூய்மையாக வைக்க வேண்டும்."சுத்தம் சோறு போடும்". நம் சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்தால் தான் நிலம், நீர், காற்று மாசுபடாது, தூய்மையான உணவு உட்கொள்ள முடியும், தூய்மையான உணவு உட்கொண்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனநோய், உடல் நோய் வராது.உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் கடுமையாக உழைத்து அதில் கிடைத்த வருமானத்தில் நாமும் உணவுண்டு மற்றவர்களுக்கும் உணவு கொடுத்து உதவி வாழ்வில் நம் மக்களோடு முன்னேறி நம் நாட்டை முன்னேற்ற முடியும். மேலும் எதிர்காலத்தில் வரும் நோயிலிருந்து நம் வீட்டிலுள்ள மக்களையும் நாட்டிலுள்ள மக்களையும் நம்மையும் காக்க வீட்டையும் நாட்டையும் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்றார்.
நீதி: "சுத்தம் சோறு போடும்" என்பதிற்கேற்ப இக்கதையில் வரும் பெண் போல நாம் பேரிச்சம்பழத்திற்கு ஆசை படாமல், பிறருடன் போட்டி , பொறாமை கொள்ளாமல் நாம் உழைத்து பொருளை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, நாம் வீட்டிலிருந்து வீதி வரை தூய்மையை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் காற்று, நிலம், நீர் மாசுபடுவதை தவிர்க்க முடியும், நல்ல காற்றை சுவாசிக்க முடியும், சுத்தமான உணவை உட்கொள்ள முடியும்,நோய் வருமுன் நம்மை நாம் காக்க முடியும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும், உடல் ஆரோக்கியமாக இருந்தால் மன தைரியம் அதிகரிக்கும் கடுமையாக உழைத்து பொருளை ஈட்டி வாழ்வில் முன்னேற முடியும்.மேலும் நம் மனதை போட்டி, பொறாமை, பேராசை போன்ற குப்பைகளை அகற்றி அன்பு என்னும் தூய்மையை மனதில் வைத்து உடலாலும் உள்ளத்தாலும் தூய்மை பெறுவோம்.
இதனை திருவள்ளுவர், திருக்குறளில்
“புறந்தூய்மை நீரான் அமையும், அகந் தூய்மை
வாய்மையால் காணப் படும்”
என்கிறார். இதன் பொருள்- உடலையும் சுற்றுச்சூழலையும் நீரால் சுத்தம் செய்யலாம்.ஒருவரது மனத்தின் தூய்மையை அவரின் சொல்லில் காணலாம்.
"சுத்தம் சுகம் தரும்" என்பது போல நாம் உடலையும், உள்ளத்தையும், வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்து நோயின்றி சுகமாய் வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக