முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுத்தம் சோறு போடும், சுத்தம் சுகம் தரும்.

 ஒருநாள்👴 பெரியவர் ஒருவர் 🏘️கிராமத்திற்கு வந்து குப்பை கூளங்களுக்கு பேரிச்சம்பழம் என்று கூவிக் கொண்டிருப்பதைக் கேட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்து 🧒ஒருவர், பெரியவரிடம் "என்ன பெரியவரே! பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று கூறுவதற்கு பதில் தவறுதலாக குப்பை கூளங்களுக்கு  பேரிச்சம்பழம் என்று கூவிக்கொண்டிருக்கின்றீர்கள் " என்றார். அதற்கு அந்த 👴பெரியவர் "நான் தவறுதலாக எதையும் கூறவில்லை  உண்மையாகவே குப்பை கூளங்கள் எடைக்கு சமமாக பேரிச்சம்பழம் இலவசமாக தருகிறேன், தெருவில் இருக்கும் குப்பைகளை கொண்டு வரக்கூடாது."என்றார். இதனைக் கேட்ட மக்கள் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு பேரிச்சம்பழம் பெற்று செல்லத் தொடங்கினர். ஒரு கன்னிப்பெண் தன் வீட்டில் உள்ள 1/2 கிலோ குப்பையை கொண்டுவந்து கொடுத்துவிட்டு 1/2 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றாள். மற்றொரு 🧒ஆண் தங்கள் வீட்டிலுள்ள 1 கிலோ குப்பைகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு 1 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றார். இவ்வாறு அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு ஏற்ப பேரிச்சம்பழம் பெற்று சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு 👧கன்னிப்பெண் மட்டும் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருப்பதை பார்த்த அந்த 👴பெரியவர் அந்த பெண்ணை அழைத்து உங்கள் 🏡வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு பேரிச்சம்பழம் பெற்று செல் என்றார். அதற்கு அந்தப் 👧பெண் எங்கள் 🏡வீட்டில் குப்பைகள் எதுவும் இல்லை என்றாள்.எது உன் வீடு? என்றார் 👴பெரியவர். இதோ 👧இந்த 2🏡ஆம் நம்பர் வீடுதான் என் வீடு என்றாள் அந்தப் பெண்.  👴பெரியவர் அந்த பெண்ணைப் பார்த்து அனைவரும்   பேரிச்சம்பழம் பெற்று செல்வதைப் பார்த்தும் தனக்கு பேரிச்சம்பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை இல்லையா? என்றார்.  எனக்கு அப்படி ஒன்றும் ஆசை இல்லை பேரிச்சம்பழம் வேண்டுமென்றால் காசு கொடுத்து கடையில் வாங்கி சாப்பிடுவேன். மற்றவர் உழைப்பில் வாழ்வது தவறு என்று கூறி விட்டு 🏡 வீட்டிற்குள் சென்றாள் அப்பெண். அந்தப் பெரியவர் பெற்ற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் 🚮போட்டுவிட்டு வீடு திரும்பினார். இதனைப் பார்த்த மக்கள் அப்பெரியவர்  பேரிச்சம்பழத்தை விலைக்கு விற்காமல் குப்பைக்கு மாற்றாக  கொடுத்துவிட்டு மேலும் அந்த குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார். இதனால் அப்பெரியவர் ஈட்டிய லாபம் என்ன? மிகவும் ஏமாளியாக உள்ளார் அந்தப் பெரியவர் என்று கேலி செய்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து 👨‍⚖️ ஒருவர் கிராமத்திற்கு வந்து அனைத்து மக்களையும் அழைத்து நான் இன்று முதல் உங்கள் கலெக்டர்,  நம் கிராமம் தூய்மையாக இருக்க வேண்டுமென்றால் முதலில் நம் வீடு தூய்மையாக இருக்க வேண்டும், இரண்டு நாட்கள் முன்பு பெரியவர் போல் வேடமிட்டு வந்து இங்குள்ள வீட்டில் எந்த வீடு தூய்மையாக உள்ளது என்பதை அறிந்தேன்.இங்குள்ள வீடுகளில் தூய்மையான வீடு 2 🏡ஆம் நம்பர் வீடு என்று கூறி 2 🏡ஆம் நம்பர் வீட்டிலுள்ள பெண்ணிற்கு இளம் தலைமுறையின் சிறந்த பெண் தூய்மையானவர் விருதை அளித்து அங்கு உள்ள அனைத்து மக்களைப் பார்த்து          வீட்டையும் நாட்டையும் தூய்மையாக வைக்க வேண்டும்."சுத்தம் சோறு போடும்". நம் சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்தால் தான் நிலம், நீர், காற்று மாசுபடாது,  தூய்மையான உணவு உட்கொள்ள முடியும்,  தூய்மையான உணவு உட்கொண்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனநோய், உடல் நோய் வராது.உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் கடுமையாக உழைத்து அதில் கிடைத்த வருமானத்தில் நாமும் உணவுண்டு மற்றவர்களுக்கும் உணவு கொடுத்து உதவி வாழ்வில்  நம் மக்களோடு முன்னேறி நம் நாட்டை முன்னேற்ற முடியும்.  மேலும் எதிர்காலத்தில் வரும் நோயிலிருந்து நம் வீட்டிலுள்ள மக்களையும் நாட்டிலுள்ள மக்களையும்  நம்மையும் காக்க  வீட்டையும் நாட்டையும் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்றார்.

நீதி: "சுத்தம் சோறு போடும்" என்பதிற்கேற்ப இக்கதையில் வரும் பெண் போல நாம் பேரிச்சம்பழத்திற்கு ஆசை படாமல், பிறருடன் போட்டி , பொறாமை கொள்ளாமல் நாம் உழைத்து பொருளை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, நாம் வீட்டிலிருந்து வீதி வரை தூய்மையை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் காற்று, நிலம், நீர் மாசுபடுவதை தவிர்க்க முடியும்,  நல்ல காற்றை சுவாசிக்க முடியும், சுத்தமான உணவை உட்கொள்ள முடியும்,நோய் வருமுன் நம்மை நாம் காக்க முடியும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும், உடல் ஆரோக்கியமாக இருந்தால் மன தைரியம் அதிகரிக்கும் கடுமையாக உழைத்து பொருளை ஈட்டி வாழ்வில் முன்னேற முடியும்.மேலும் நம் மனதை போட்டி, பொறாமை, பேராசை  போன்ற குப்பைகளை அகற்றி அன்பு என்னும் தூய்மையை மனதில் வைத்து உடலாலும் உள்ளத்தாலும் தூய்மை பெறுவோம். 

இதனை திருவள்ளுவர், திருக்குறளில்

“புறந்தூய்மை நீரான் அமையும், அகந் தூய்மை
 வாய்மையால் காணப் படும்” 

என்கிறார். இதன் பொருள்- உடலையும் சுற்றுச்சூழலையும் நீரால் சுத்தம் செய்யலாம்.ஒருவரது மனத்தின் தூய்மையை  அவரின் சொல்லில் காணலாம்.

  "சுத்தம் சுகம் தரும்" என்பது போல நாம் உடலையும், உள்ளத்தையும், வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்து நோயின்றி சுகமாய் வாழ்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...