முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், கொடுப்பாரைத் தடுக்காதே, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

   பழங்காலத்தில் நாட்டை 🤴அரசன் ஆண்டு வந்தார். அப்போது 🧒மீன் வியாபாரி ஒருவருக்கு⛵ கடலில் ஒரு அரிய வகை 🐠மீன் 'அதாவது அந்த 🐠மீன் வருடத்திற்கு ஒரு முறை தான் வலையில் சிக்கும்', அப்படிப்பட்ட அரிய வகை சுவை மிகுந்த 🐠மீன் தன் வலையில் தான் பிடித்ததை எண்ணி மகிழ்வுற்று, யாருக்கும் தெரியாமல் ஒரு சாக்கு பையில் போட்டு கொண்டு அரண்மனைக்குள் சென்று 👲வாயிற் காவலரிடம் 🤴அரசருக்கு பரிசு தர விரும்புகிறேன், 🤴அரசரை காண வேண்டும் என்று கூறினார். 👲வாயிற்காவலன் 🤴அரசனிடம் சென்று "அரசே தங்களுக்கு பரிசு தர 🧒மீன் வியாபாரி ஒருவர் வந்திருக்கிறார், தாங்கள் அனுமதி அளித்ததால் தங்களிடம் அழைத்து வருகிறேன்" என்றார். 🤴அரசர் " 🧒மீன் வியாபாரியை அழைத்து வா " என்றார். 👲வாயிற் காவலன் 🧒மீன் வியாபாரியை அரசரிடம் அழைத்து வந்தார். 🧒மீன் வியாபாரி 🤴அரசரைப்பார்த்து  நான் இன்று எனது மீன் பிடித்தல் தொழிலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு அரிய வகையான சுவை மிகுந்த 🐠மீன் என் வலையில் சிக்கியது, அதனை யாருக்கும் தெரியாமல் தங்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் பரிசாக உங்களுக்குத் தருகின்றன் என்று கூறி 🐠மீனை 🤴அரசரிடம் கொடுத்தார். 🤴அரசர் தன் மீதுள்ள அன்பை பாராட்டி 100 பொற்காசுகளை மீன் வியாபாரிக்கு வழங்கினார். இதனைப் பார்த்த 👧அரசி 🤴அரசன் அருகில் சென்று 🤴அரசர் 👂செவியின் அருகில் யாருக்கும் கேளா வண்ணம் "🐠மீனின் விலையோ 10 பொற்காசுகள் தான் பெறும், தாங்கள் அதிகமாக 100 பொற்காசுகள் கொடுத்திருக்கின்றீர்கள்", என்று கூறினார். அதற்கு 🤴அரசர், " 🧒மீன் வியாபாரி என்மீது வைத்துள்ள அன்பால் 90 பொற்காசுகள் அதிகமாக வழங்கினேன்" என்றார். 🧒மீன் வியாபாரி கை தவறி ஒரு பொற்காசை கீழே தவற விட்டார். 🧒மீன் வியாபாரி கீழே விழுந்த பொற்காசை தேடி எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் 👧அரசி முன்பு போலவே 🤴அரசரின் 👂செவி அருகில் " 🤴அரசே 🧒மீன் வியாபாரி கீழே விழுந்த ஒரு பொற்காசை கூட விடாமல் பேராசை படும் கஞ்சனாக  உள்ளார் , அவருக்கு தாராளமாக தாம் 100 பொற்காசுகள் கொடுத்தது தவறு " என்றார்.  🤴அரசர் உடனே 🧒மீன் வியாபாரியிடம் "ஏன் கீழே விழுந்த ஒரு பொற்காசை எடுத்தாய், எடுக்காமல் இருந்திருந்தால் அதனை வேலையாள் யாரேனும் எடுத்திருப்பார்கள் அல்லவா, பொற்காசுகள் மீது  பேராசை கொண்டு கஞ்சன் போல் கீழே விழுந்த பொற்காசை மற்றவர்கள் எடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தானே அவசரமாய் கீழே குனிந்து பொற்காசை எடுத்தாய்" என்று வினவ , அதற்கு🧒 மீன் வியாபாரியோ," 🤴அரசே உங்கள் மீது நான் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் மட்டுமே 🐠மீனை பரிசாக கொடுத்தேன் அதற்கு பொற்காசுகள் தங்களிடமிருந்து பெறுவேன் என்று சிறிதேனும் நான் நினைக்கவில்லை, 🐠ஒரு மீனுக்கு  நீங்கள் 100 பொற்காசுகள் கொடுப்பீர்கள் என்றும் எண்ணவில்லை, பொற்காசுகள் மீது எனக்கு பேராசை இல்லை தாங்கள் கொடுத்ததை திருப்பித் தருவது தங்களுக்கு நற்பெயரைத் தராது என்பதால் 100 பொற்காசுகளை ஏற்று தங்களிடம் பெற்றுக்கொண்டேன்.🧒  "நான் மட்டும் பொற்காசுகள் பெற்று வாழ வேண்டும் மற்றவர் அதாவது 👲வேலையாள் எடுத்து பொற்காசை பெற்றுவிடக்கூடாது என்று கஞ்சத்தனமாக கீழே விழுந்த பொற்காசை எடுக்கவில்லை,  🤴அரசர் அதாவது தங்கள் உருவப்படம் பொற்காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளதால் தவறியேனும் எவரும்  காலால் மிதித்தால் தங்களை அவமானப்படுத்தும்  செயலாகும் என்பதால் பொற்காசை அவசரமாக எடுத்தேன்" என்றார் 🧒மீன் வியாபாரி. உடனே 🤴அரசர், 🧒மீீீன் வியாபாரி யிடம் "நான் உங்களது செயலை தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னிக்கவும்" என்று கூறி மேலும் 100 பொற்காசுகள்  பரிசளித்தார். "🤴அரசர் மென்மேலும் 100 ஆண்டுகள் வாழ்ந்து சிறப்பான ஆட்சியை   மக்களுக்குத் தர வேண்டும்", என்று 🤴அரசரை வாழ்த்தி 🧒மீன்  வியாபாரி மொத்தம் 200 பொற்காசுகள் பெற்று மகிழ்ச்சியோடு வீீீட்டுக்குச் சென்றார்.

நீதி: " கொடுப்பாரைத் தடுக்காதே",  "தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்" , கடவுள் கொடுக்க நினைப்பதை,  கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது என்பது போல மக்களுக்கு கடவுளாக 🤴அரசர் கொடுப்பதை 👧அரசியால் தடுக்கமுடியவில்லை.

        "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்". இறைவனை வழிபட்டு இறைவனுக்கு படையலிடுவதைக்    காட்டிலும் பசியுள்ள ஏழைக்கு உணவு வழங்கி பசியைப் போக்குவது மிகச் சிறந்த செயல் என்கிறது திருக்குறள்.

        "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்", என்றவாறு நாம் நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்கு அன்பாக வழங்கி உதவி செய்தால் ஏழைகள் இன்புற்று சிரித்து மனதார வாழ்த்துவார்கள், அது இறைவன் வாழ்த்துவதைப் போன்றது.ஏழைகளின் அன்பையும் வாழ்த்தையும் பெறுவது. இறைவனின் அன்பையும் வாழ்த்தையும் பெறுவதற்குச் சமம். 

        எனவே நம்மிடம் இருப்பதை மற்றவர்கள் உடன் பகிர்ந்து மற்றவர்கள் அனைவரும் நம்மவர் என்று எண்ணி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அனைவரின் சிரிப்பிலும் இறைவனைக் காண்போம்.

            

              



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...