தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், கொடுப்பாரைத் தடுக்காதே, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
பழங்காலத்தில் நாட்டை 🤴அரசன் ஆண்டு வந்தார். அப்போது 🧒மீன் வியாபாரி ஒருவருக்கு⛵ கடலில் ஒரு அரிய வகை 🐠மீன் 'அதாவது அந்த 🐠மீன் வருடத்திற்கு ஒரு முறை தான் வலையில் சிக்கும்', அப்படிப்பட்ட அரிய வகை சுவை மிகுந்த 🐠மீன் தன் வலையில் தான் பிடித்ததை எண்ணி மகிழ்வுற்று, யாருக்கும் தெரியாமல் ஒரு சாக்கு பையில் போட்டு கொண்டு அரண்மனைக்குள் சென்று 👲வாயிற் காவலரிடம் 🤴அரசருக்கு பரிசு தர விரும்புகிறேன், 🤴அரசரை காண வேண்டும் என்று கூறினார். 👲வாயிற்காவலன் 🤴அரசனிடம் சென்று "அரசே தங்களுக்கு பரிசு தர 🧒மீன் வியாபாரி ஒருவர் வந்திருக்கிறார், தாங்கள் அனுமதி அளித்ததால் தங்களிடம் அழைத்து வருகிறேன்" என்றார். 🤴அரசர் " 🧒மீன் வியாபாரியை அழைத்து வா " என்றார். 👲வாயிற் காவலன் 🧒மீன் வியாபாரியை அரசரிடம் அழைத்து வந்தார். 🧒மீன் வியாபாரி 🤴அரசரைப்பார்த்து நான் இன்று எனது மீன் பிடித்தல் தொழிலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு அரிய வகையான சுவை மிகுந்த 🐠மீன் என் வலையில் சிக்கியது, அதனை யாருக்கும் தெரியாமல் தங்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் பரிசாக உங்களுக்குத் தருகின்றன் என்று கூறி 🐠மீனை 🤴அரசரிடம் கொடுத்தார். 🤴அரசர் தன் மீதுள்ள அன்பை பாராட்டி 100 பொற்காசுகளை மீன் வியாபாரிக்கு வழங்கினார். இதனைப் பார்த்த 👧அரசி 🤴அரசன் அருகில் சென்று 🤴அரசர் 👂செவியின் அருகில் யாருக்கும் கேளா வண்ணம் "🐠மீனின் விலையோ 10 பொற்காசுகள் தான் பெறும், தாங்கள் அதிகமாக 100 பொற்காசுகள் கொடுத்திருக்கின்றீர்கள்", என்று கூறினார். அதற்கு 🤴அரசர், " 🧒மீன் வியாபாரி என்மீது வைத்துள்ள அன்பால் 90 பொற்காசுகள் அதிகமாக வழங்கினேன்" என்றார். 🧒மீன் வியாபாரி கை தவறி ஒரு பொற்காசை கீழே தவற விட்டார். 🧒மீன் வியாபாரி கீழே விழுந்த பொற்காசை தேடி எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் 👧அரசி முன்பு போலவே 🤴அரசரின் 👂செவி அருகில் " 🤴அரசே 🧒மீன் வியாபாரி கீழே விழுந்த ஒரு பொற்காசை கூட விடாமல் பேராசை படும் கஞ்சனாக உள்ளார் , அவருக்கு தாராளமாக தாம் 100 பொற்காசுகள் கொடுத்தது தவறு " என்றார். 🤴அரசர் உடனே 🧒மீன் வியாபாரியிடம் "ஏன் கீழே விழுந்த ஒரு பொற்காசை எடுத்தாய், எடுக்காமல் இருந்திருந்தால் அதனை வேலையாள் யாரேனும் எடுத்திருப்பார்கள் அல்லவா, பொற்காசுகள் மீது பேராசை கொண்டு கஞ்சன் போல் கீழே விழுந்த பொற்காசை மற்றவர்கள் எடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தானே அவசரமாய் கீழே குனிந்து பொற்காசை எடுத்தாய்" என்று வினவ , அதற்கு🧒 மீன் வியாபாரியோ," 🤴அரசே உங்கள் மீது நான் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் மட்டுமே 🐠மீனை பரிசாக கொடுத்தேன் அதற்கு பொற்காசுகள் தங்களிடமிருந்து பெறுவேன் என்று சிறிதேனும் நான் நினைக்கவில்லை, 🐠ஒரு மீனுக்கு நீங்கள் 100 பொற்காசுகள் கொடுப்பீர்கள் என்றும் எண்ணவில்லை, பொற்காசுகள் மீது எனக்கு பேராசை இல்லை தாங்கள் கொடுத்ததை திருப்பித் தருவது தங்களுக்கு நற்பெயரைத் தராது என்பதால் 100 பொற்காசுகளை ஏற்று தங்களிடம் பெற்றுக்கொண்டேன்.🧒 "நான் மட்டும் பொற்காசுகள் பெற்று வாழ வேண்டும் மற்றவர் அதாவது 👲வேலையாள் எடுத்து பொற்காசை பெற்றுவிடக்கூடாது என்று கஞ்சத்தனமாக கீழே விழுந்த பொற்காசை எடுக்கவில்லை, 🤴அரசர் அதாவது தங்கள் உருவப்படம் பொற்காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளதால் தவறியேனும் எவரும் காலால் மிதித்தால் தங்களை அவமானப்படுத்தும் செயலாகும் என்பதால் பொற்காசை அவசரமாக எடுத்தேன்" என்றார் 🧒மீன் வியாபாரி. உடனே 🤴அரசர், 🧒மீீீன் வியாபாரி யிடம் "நான் உங்களது செயலை தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னிக்கவும்" என்று கூறி மேலும் 100 பொற்காசுகள் பரிசளித்தார். "🤴அரசர் மென்மேலும் 100 ஆண்டுகள் வாழ்ந்து சிறப்பான ஆட்சியை மக்களுக்குத் தர வேண்டும்", என்று 🤴அரசரை வாழ்த்தி 🧒மீன் வியாபாரி மொத்தம் 200 பொற்காசுகள் பெற்று மகிழ்ச்சியோடு வீீீட்டுக்குச் சென்றார்.
நீதி: " கொடுப்பாரைத் தடுக்காதே", "தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்" , கடவுள் கொடுக்க நினைப்பதை, கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது என்பது போல மக்களுக்கு கடவுளாக 🤴அரசர் கொடுப்பதை 👧அரசியால் தடுக்கமுடியவில்லை.
"ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்". இறைவனை வழிபட்டு இறைவனுக்கு படையலிடுவதைக் காட்டிலும் பசியுள்ள ஏழைக்கு உணவு வழங்கி பசியைப் போக்குவது மிகச் சிறந்த செயல் என்கிறது திருக்குறள்.
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்", என்றவாறு நாம் நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்கு அன்பாக வழங்கி உதவி செய்தால் ஏழைகள் இன்புற்று சிரித்து மனதார வாழ்த்துவார்கள், அது இறைவன் வாழ்த்துவதைப் போன்றது.ஏழைகளின் அன்பையும் வாழ்த்தையும் பெறுவது. இறைவனின் அன்பையும் வாழ்த்தையும் பெறுவதற்குச் சமம்.
எனவே நம்மிடம் இருப்பதை மற்றவர்கள் உடன் பகிர்ந்து மற்றவர்கள் அனைவரும் நம்மவர் என்று எண்ணி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அனைவரின் சிரிப்பிலும் இறைவனைக் காண்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக