குளத்தில் 🐡🐠🐟🐋🎣🎏🍥🍣🍢🐟🐋🐋🎣🎣 மீன்கள் வாழ்ந்து வந்தது. இரு மீன்கள் நண்பர்களாக இருந்தது🐟🐠. ஒரு நாள் இரவு இரு மீன் வியாபாரிகள் வழிப்போக்கன்களாய் இக்குளத்தை வந்து அடைவதை இந்த மீன்🐠 பார்த்தது. அதுசமயம் அந்த இரண்டு மீன் வியாபாரிகளில் ஒருவர் "நாளை இக்குளத்திலுள்ள மீன்களை வலையில் பிடித்து சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் பெறுவோம்" என்று கூற மற்றொருவர் "சரி" என்று கூறினார். மீன் வியாபாரிகள் கூறியதை கேட்டு அந்த மீன்🐠 பதற்றம் அடைந்து தனது நண்பனான மற்றொரு மீனிடம்🐟 சென்று "நாம் இந்த குளத்தை விட்டு உடனே வேறு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாக வேண்டும் இல்லையெனில் நாளை மீன் வியாபாரிகள் இருவர் தங்களை சிறை பிடிப்பர், என் யோசனைப்படி வயலுக்குச் செல்லும் வாய்க்கால் குளத்தின் ஒரு பகுதியில் உள்ளது, அதன் வழியாக மற்றொரு குளத்திற்கு சென்று விதியை மதியால் வெல்வோம் " என்று கூறியது. அதற்கு 🐟நண்பனான மீன், "விதிப்படி நடக்கட்டும் நான் இங்கு தான் இருப்பேன்" என்றது.இதனை கேட்ட 🎣🐡🐟🎏🍥🍣🍢🐋🐡🐟🍥மற்ற மீன்கள் அனைத்தும் விதிப்படி நடக்கட்டும் என்றது. மீன்🐠 "சரி நான் இக்குளத்தைவிட்டு வேறு குளத்திற்கு செல்கிறேன் , எப்படியாவது உன்னை நீ காத்துக்கொள்" என்று கூறி இரவோடிரவாக வாய்க்கால் வழியே சென்று வேறு குளத்தை அடைந்து வாழத் தொடங்கியது. மறுநாள் காலையில் இரு மீன்பிடியாளர்கள் குளத்திலுள்ள அனைத்து🐟🎏🐟🐡🎣🐡🎣🐋🍢🍣🍥 மீன்களையும் பிடித்து சந்தைப்படுத்தலை செய்தனர். 🐟நண்பன் மீன் ,மீன் வியாபாரிகளிடம் பிடிபட்டு இறந்தது.
நீதி: இதனை
ஏவவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர்
போகும் அளவும் ஓர் நோய்
என்றார் திருவள்ளுவர்.நோயால் பாதித்தவர் தன்னை காக்க மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உட்கொள்ளாமல் நோயால் அவதிப்பட்டு அருகிலுள்ள அனைவருக்கும் நோயை பரப்பி தானும் வருந்தி மற்றவர்களையும் வருந்தவைப்பர்.
🐠மீன் சிந்தித்து செயல்பட்டதைப்போல் நாமும் நமக்கு வரும் துன்பத்தை எண்ணி மனம் தளராமல் துன்பத்திலிருந்து விடுபடும் செயல்களை தன் அறிவால் கண்டறிந்து அதனை பின்பற்றி "விதியை மதியால் வென்று" துன்பத்திலிருந்து விடுபடுவோம்.
🐟 நண்பன் மீன், தன் நண்பன்🐠 சொன்னது போல் வேறு குளத்திற்கு சென்றிருந்தால் தன் நண்பனோடு சந்தோஷமாக வாழ்ந்திருக்கும், இறந்திருக்காது. சொந்த புத்தியால் தன்னை காத்துக் கொள்ளலாமல் விதிப்படி நடக்கட்டும் என்று எண்ணி 🐟நண்பன் மீன் இறுதியில் இறந்தது. ஒன்று " சொல் புத்தி வேண்டும் இல்லையெனில் சுய புத்தி வேண்டும்" இரண்டும் இல்லையெனில் வாழ இயலாது.
ஆகையால் நம் மீது அக்கறை கொண்டவர்கள் கூறுவதை செவிசாய்த்து சுய புத்தியால் ஆராய்ந்து நல்வழியினை கண்டு அதனை பின்பற்றி நமக்கு வரும் துன்பத்திலிருந்து மீண்டு மகிழ்வான வாழ்வை வாழ்வோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக