முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விதியை மதியால் வெல்வோம்

        குளத்தில் 🐡🐠🐟🐋🎣🎏🍥🍣🍢🐟🐋🐋🎣🎣 மீன்கள் வாழ்ந்து வந்தது. இரு மீன்கள் நண்பர்களாக இருந்தது🐟🐠. ஒரு நாள் இரவு இரு மீன் வியாபாரிகள் வழிப்போக்கன்களாய் இக்குளத்தை வந்து அடைவதை இந்த மீன்🐠 பார்த்தது. அதுசமயம் அந்த இரண்டு மீன் வியாபாரிகளில் ஒருவர் "நாளை இக்குளத்திலுள்ள மீன்களை வலையில் பிடித்து  சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் பெறுவோம்" என்று   கூற மற்றொருவர் "சரி" என்று கூறினார். மீன் வியாபாரிகள் கூறியதை கேட்டு அந்த மீன்🐠 பதற்றம் அடைந்து தனது நண்பனான மற்றொரு மீனிடம்🐟 சென்று "நாம் இந்த குளத்தை விட்டு உடனே வேறு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாக வேண்டும் இல்லையெனில் நாளை மீன் வியாபாரிகள் இருவர் தங்களை சிறை பிடிப்பர், என் யோசனைப்படி  வயலுக்குச் செல்லும் வாய்க்கால் குளத்தின் ஒரு பகுதியில் உள்ளது, அதன் வழியாக மற்றொரு குளத்திற்கு சென்று விதியை மதியால் வெல்வோம் "  என்று கூறியது. அதற்கு 🐟நண்பனான மீன், "விதிப்படி நடக்கட்டும் நான் இங்கு தான் இருப்பேன்" என்றது.இதனை கேட்ட 🎣🐡🐟🎏🍥🍣🍢🐋🐡🐟🍥மற்ற மீன்கள் அனைத்தும் விதிப்படி நடக்கட்டும் என்றது. மீன்🐠 "சரி நான் இக்குளத்தைவிட்டு வேறு குளத்திற்கு செல்கிறேன் , எப்படியாவது உன்னை நீ காத்துக்கொள்" என்று  கூறி இரவோடிரவாக வாய்க்கால் வழியே சென்று வேறு குளத்தை அடைந்து வாழத் தொடங்கியது. மறுநாள் காலையில் இரு மீன்பிடியாளர்கள் குளத்திலுள்ள அனைத்து🐟🎏🐟🐡🎣🐡🎣🐋🍢🍣🍥 மீன்களையும் பிடித்து சந்தைப்படுத்தலை செய்தனர். 🐟நண்பன் மீன் ,மீன் வியாபாரிகளிடம் பிடிபட்டு இறந்தது.


நீதி: இதனை

ஏவவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர் 

போகும் அளவும் ஓர் நோய் 

 என்றார் திருவள்ளுவர்.நோயால் பாதித்தவர் தன்னை காக்க மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உட்கொள்ளாமல் நோயால் அவதிப்பட்டு அருகிலுள்ள அனைவருக்கும் நோயை பரப்பி தானும் வருந்தி மற்றவர்களையும் வருந்தவைப்பர்.

    🐠மீன்  சிந்தித்து செயல்பட்டதைப்போல் நாமும் நமக்கு வரும் துன்பத்தை எண்ணி மனம் தளராமல் துன்பத்திலிருந்து விடுபடும் செயல்களை தன் அறிவால் கண்டறிந்து அதனை பின்பற்றி "விதியை மதியால் வென்று" துன்பத்திலிருந்து விடுபடுவோம்.

         🐟 நண்பன் மீன், தன்  நண்பன்🐠 சொன்னது போல் வேறு குளத்திற்கு சென்றிருந்தால் தன் நண்பனோடு சந்தோஷமாக வாழ்ந்திருக்கும், இறந்திருக்காது. சொந்த புத்தியால் தன்னை காத்துக் கொள்ளலாமல் விதிப்படி நடக்கட்டும் என்று எண்ணி  🐟நண்பன் மீன் இறுதியில் இறந்தது. ஒன்று " சொல் புத்தி வேண்டும் இல்லையெனில் சுய புத்தி வேண்டும்" இரண்டும்  இல்லையெனில் வாழ இயலாது. 

             ஆகையால் நம் மீது அக்கறை கொண்டவர்கள் கூறுவதை செவிசாய்த்து சுய புத்தியால் ஆராய்ந்து நல்வழியினை கண்டு அதனை  பின்பற்றி நமக்கு வரும் துன்பத்திலிருந்து  மீண்டு  மகிழ்வான வாழ்வை வாழ்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தன் கையே தனக்கு உதவி.

  🌒இரவு நேரத்தில் 👨விவசாயி ஒருவர் 🌾🌾🌾🌾விவசாயம் செய்து  மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி தாமும் மாட்டு வண்டியிலேறி அமர்ந்து வீடு திரும்பும் போது மிகுந்த 💨காற்றுடன் கூடிய ⛈️மழை பெய்தது. மண் சாலை சேற்றானது, மாட்டு வண்டியில் இருக்கும்  இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரம் சேற்றால் மண்ணிற்கு அடியில் செல்ல இதனை பார்த்த விவசாயி கண்ணிற்கு எட்டும் தொலைவில் எவரும் தென்படாததால் தாம் தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டே சேற்றிலிருந்து சக்கரத்தை எடுக்க முயன்று வெற்றிகரமாக மண்ணில் பாதி புதைந்த சக்கரத்தை மேலே எடுத்து அருகில் வைத்து பின் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு சென்றடைந்தார். நீதி- "தன் கையே தனக்கு உதவி" என்பது போல் விவசாயி தாமே முயற்சி செய்து மண்ணில் புதைந்த சக்கரத்தை மேலே எடுத்தார். இவ்வாறு அவர் செய்யாமல் யாராவது தனக்கு உதவுவார்கள் என்று நினைத்திருந்தால் யாருமில்லாத சாலையில் பொழுது விடியும் வரை காத்திருக்க நேர்ந்திருக்கும், குளிரால் காய்ச்சல் வந்து அவரது  உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கும். ஆனால் அவர் தன் புத்திசாலித்தனத்தால...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வருமுன் காப்பதே சிறந்தது.

 கோடைக்காலத்தில் 🐜🐜🐜🐜🐜🐜🐜🐜  எறும்புகள் தன் கூட்டத்தோடு வயலில் வாழ்ந்து வந்தது.அதனுடன் வயலில் ஒரு 🦗  வெட்டுக்கிளியும் தன் பொழுதை மிக சந்தோஷமாக அருகிலிருந்த மரத்திலுள்ள பழங்களைப் பறித்து சாப்பிட்டு, எதிர்காலத்தைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் ஆடி, பாடி, விளையாடி நிகழ்காலத்தை கழித்துக்கொண்டிருந்தது.ஆனால் எறும்புகளோ நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி சுறுசுறுப்புடன் வயலில் தன் உணவை சேகரித்து இருப்பிடத்திற்கு கொண்டுசெல்லும்.ஒரு நாள் எறும்புகள் தன் உணவை எடுத்துச் செல்வதைக் கண்ட வெட்டுக்கிளி ஏளனமாக சிரித்தது. அது சமயம் ஒரு சிறிய எறும்பு தான் எடுத்து வந்த உணவைத் தவறிக் கீழே போட்டது.அந்த எறும்பு வெட்டுக்கிளியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டது.வெட்டுக்கிளி உதவ மறுத்தது மட்டுமின்றி எறும்பை நிகழ்காலத்தை மகிழ்ச்சி யாக வாழத்தெரியாதவன் என்று உதாசீனப்படுத்தி இகழ்ந்தது.எறும்பு வெட்டுக்கிளியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே விழுந்த உணவைத் தாமாகவே முயன்று எடுத்து இருப்பிடத்தை நோக்கிச் சென்றடைந்தது.மேலும் எறும்புகள் தங்களை குளிர்காலத்தில் காக்க எறும்பு புற்றையும் குளிர்கா...

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...